கரூர் : அதிமுக உட்கட்சி அமைப்பு தேர்தலில் கரூர் மாவட்ட செயலாளராக மீண்டும் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர்கள் வெளியிட்ட அறிக்கையில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் உட்கட்சி தேர்தல் தமிழகம் முழுவதும் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது.
அதில் முதல் கட்டமாக கரூர் மாவட்டம் மாவட்டக் கழகச் செயலாளர், மாவட்டக் கழக நிர்வாகிகள், மாவட்ட செயற்குழு உறுப்பினர் என மாவட்ட அளவிலான பதவிக்கான கழக அமைப்பு தேர்தல் இன்று நடைபெற்றது.
கரூர் மாவட்டத்திற்கு கழக அமைப்பு தேர்தல் பொறுப்பாளராக தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர், சேலம் புறநகர் மாவட்ட புரட்சித்தலைவி பேரவைச் செயலாளர் R. இளங்கோவன் அவர்களும் மற்றும் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் A.P.ஜெய்சங்கர் அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளார்.
கரூர் மாவட்டக் கழக அலுவலகத்தில் கழக அமைப்புத் தேர்தலில் மாவட்ட கழக செயலாளர் பதவிக்காக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் விருப்ப மனு அளித்தார்.
அவரை எதிர்த்து யாரும் போட்டி இடததால் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் மாவட்ட கழக செயலாளர் பதவிக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மேலும் மாவட்டக் கழக துணைச் செயலாளர், மாவட்ட அவைத்தலைவர் இணைச் செயலாளர்கள், பொருளாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்காக கழக நிர்வாகிகள் ஆர்வத்துடன் விருப்ப மனு அளித்தனர்.
ராஜமௌலி-மகேஷ் பாபு கூட்டணி இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் எஸ் எஸ் ராஜமௌலி. தெலுங்கில் பல திரைப்படங்களை…
வாடகைக்கு ஆட்களைப் பிடித்து, திமுக புகழ் பாடச் சொன்னால் மட்டும் போதாது செயலிலும் இருக்க வேண்டும் என திமுக அரசை…
வெற்றிமாறன்-சிம்பு கூட்டணி வெற்றிமாறன்-சிம்பு கூட்டணியில் உருவாகவுள்ள திரைப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கப்பட உள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன. தனுஷ் தனது…
டிரெண்டிங் இசையமைப்பாளர் தமிழ் சினிமா உலகில் தற்போது டிரெண்டிங் இசையமைப்பாளராக வலம் வருபவர் சாய் அப்யங்கர். “கட்சி சேர” என்ற…
மடப்புரத்தில் உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற வந்த தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்த…
திரிஷ்யம் படத்தின் ரீமேக் 2013 ஆம் ஆண்டு ஜீத்து ஜோசஃப் இயக்கத்தில் மலையாளத்தில் மோகன் லால் நடிப்பில் வெளியான திரைப்படம்…
This website uses cookies.