திருப்பூர் மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் சொத்து வரி உயர்வுக்கு எதிராக அதிமுக கவுன்சிலர்கள் தலையில் துண்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியின் சாதாரண மன்றக் கூட்டம் இன்று (நவ.28), மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மற்றும் ஆணையாளர் ராமமூர்த்தி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மேயர் தினேஷ்குமார், தீர்மானங்களை வாசித்தார். அப்போது, அதிமுக கவுன்சிலர்கள் குறுக்கிட்டனர்.
தொடர்ந்து, திருப்பூர் மாநகராட்சியில் உயர்த்தப்பட்ட சொத்து வரி, தொழில் வரி ஆகியவற்றிற்கு எதிராக கேள்வி எழுப்பினர். அது மட்டுமல்லாமல், கறுப்பு உடையில் வந்த அதிமுக கவுன்சிலர்கள், மன்றத்தில் அமர்ந்து தலையில் துண்டை முக்காடு போல் அணிந்து கொண்டு உயர்த்தப்பட்டப் வரிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆனால், இதனை ஒரு பொருட்டாக ஏற்றுக் கொள்ளாத மேயர் தினேஷ்குமார், தீர்மானங்களை முழுவதுமாகக் கூட வாசிக்காமல், தீர்மான எண்களை மட்டும் சொல்லிவிட்டு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அறிவித்தார். அது மட்டுமின்றி, கூட்டம் நிறைவுற்றதாகவும் கூறிவிட்டுச் சென்றார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
இதனையடுத்து, மன்றக் கூட்ட அரங்கில் இருந்து வெளியே வந்த அதிமுக கவுன்சிலர்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர்கள் ஆகியோர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த சாலையில் சிறிது நேரத்திற்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: பதவி போயும் மவுசு குறையலயே… ரோஜாவிடம் செல்பி எடுக்க முண்டியடித்த பக்தர்கள்!
பின்னர், சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து கவுன்சிலர்களையும் கைது செய்து, வேனில் அழைத்துச் சென்றனர். இதன் காரணமாக, இன்று திருப்பூர் சாதாரண மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்னென்ன என்பதே தெரியாத சூழல் உருவாகி உள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.