விழுப்புரம் : திண்டிவனத்தில் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் கைது செய்யப்பட உள்ளதாக வந்த தகவலையடுத்து நள்ளிரவில் அவரது வீட்டின் முன்பு அதிமுகவினர் குவிந்ததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், மொட்டையன் தெருவில் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் சமீபத்தில் நடந்த கட்சிக் கூட்டங்களில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் குறித்தும், தமிழக அரசு குறித்தும் விமர்சனம் செய்து பேசி வருகின்றார்.
இந்நிலையில் நேற்று, காலையில் விழுப்புத்தில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். பின்னர் சென்னைக்குப் புறப்பட்டு சென்றார். இந்த நிலையில் நள்ளிரவில் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகத்தை போலீசார் கைது செய்ய உள்ளதாக வெளியான தகவல் அடிப்படையில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் பல்வேறு பகுதியில் இருந்து வந்து அவரது வீட்டின் முன்பு குவிந்தனர் .
இதனால் சிவி சண்முகம் வீடு உள்ள பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. நள்ளிரவில் சென்னையில் இருந்து திண்டிவனம் வீட்டிற்கு வந்த சி.வி.சண்முகம் அங்கிருந்த கட்சியினரிடம் கைது செய்தாலும் பரவாயில்லை, என்றாவது ஒருநாள் கைது செய்யத்தான் போகிறார்கள் எனவே அனைவரும் அவரவர் வீட்டுக்கு செல்லுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார்.
இதையடுத்து அங்கிருந்த கட்சி தொண்டர்கள் கலைந்து சென்றனர். முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் போலிசாரால் கைது செய்யப்படலாம் என்ற தகவலால் சிவி சண்முகம் வீட்டின் முன்பு நள்ளிரவில் 200 -க்கும் மேற்ப்பட்ட கட்சித் தொண்டர்கள் குவிந்தத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.