Categories: தமிழகம்

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் நீதிபதி குலசேகரன் ஆணையம் முடக்கம் : திமுக மீது அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு!!

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் நீதிபதி குலசேகரன் ஆணையத்தை செயல்படுத்தாமல்
அரசு முடக்கியுள்ளதாக, அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றஞ்சாடியுள்ளார்.

விழுப்புரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: இந்தியாவில் முதல் அரசியலமைப்பு சாசனமே, இட ஒதுக்கீட்டின் அடிப்படையில்தான் திகழ்ந்தது.

அதன்படி, தமிழ்நாட்டில் கல்வி, வேலை வாய்ப்பில் 69 சதவீதம், இடஒதுக்கீட்டின் அடிப்படையில்தான் திகழ்ந்து வருகிறது. இடஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது. அதனடிப்படையில்தான் அதிமுக ஆட்சியில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

இந்த உள்ஒதுக்கீட்டை எதிர்த்து, நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்ட, நிலையில், இந்த உள்ஒதுக்கீட்டை ரத்து செய்து, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திமுக எம்பியாக உள்ள வில்சன் நீதிமன்றத்தில் முரண்பாடான நிலைப்பாட்டை எடுத்துள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது. அரசியல் காழ்ப்புணர்ச்சியால் நீதிபதி குலசேகரன் ஆணையத்தை செயல்படுத்தாமல் அரசு முடக்கியுள்ளது.

மதுரை உயர்நீதிமன்றக் கிளை 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழக்கை முறையாக நடத்தி இருந்தால், தற்போது இந்த நிலை ஏற்பட்டிருக்காது. இந்தியா முழுவதும் ஆய்வு நடத்தி, 1931-ல் எடுக்கப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பின் படி, இட ஒதுக்கீடு பின்பற்றப்பட்டுள்ளது.

எனவே, உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அரசு முன்வர வேண்டும். தவறும்பட்சத்தில், கல்வி வேலை வாய்ப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ள 69 சதவீத இடஒதுக்கீடும் பறிபோகும் நிலை ஏற்படும் என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்று ஓராண்டு ஆகிறது. இந்த ஓராண்டில் சாதனை திட்டங்கள் எதுவும் இதுவரை செயல்படுத்தவில்லை. தமிழகத்தில் பாலியல் உள்ளிட்ட பல குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்று வருவது வேதனை அளிப்பதாக உள்ளது என்று கூறிய சி.வி.சண்முகம், அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட தாலிக்கு தங்கம் திட்டம், பெண்களுக்கு மானிய விலையில் அம்மா ஸ்கூட்டர் வழங்கும் திட்டம் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம் உள்ளிட்டவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனை மீண்டும் செயல்படுத்த வலியுறுத்தி, மிக விரைவில் அதிமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.