தமிழகம்

உதயநிதி ஸ்டாலின் இஸ்லாமிய விரோதியா? திமுகவை திக்குமுக்காட வைத்த அதிமுக!

வக்பு வாரிய சட்டம் மீதான தீர்மானம் குறித்த விவாதத்தில் Absent ஆன ஸ்டாலின் மாடல் அரசின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இஸ்லாமிய விரோதியா? என அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை: தமிழக பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இன்றைய விவாதத்தின்போது, இஸ்லாமிய மக்களை வஞ்சிக்கும் வக்ஃப் வாரியச் சட்டத் திருத்தத்தை எதிர்க்கும் வகையிலான தனித்தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்து, அதன் மீது விவாதம் நடத்தப்பட்டது.

ஆனால், இன்றைய நிகழ்வில் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளவில்லை. இதனைச் சுட்டிக்காட்டி திமுக ஐடி விங் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், “இஸ்லாமியர் விரோதி அடிமை பழனிச்சாமி. இஸ்லாமிய மக்களை வஞ்சிக்கும் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட இன்று, சட்டப்பேரவை நிகழ்வுகளில் பிரதான எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கவில்லை.

குடியுரிமை திருத்த மசோதாவை ஆதரித்து தொடங்கி இன்னும் எத்தனை எத்தனை விரோதங்களை செய்யப் போகிறீர்கள் அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டு கார் விட்டு கார் மாறி பயணித்த அடிமைச்சாமி அவர்களே?” எனக் கடுமையாக விமர்சிக்கப்பட்டு இருந்தது.

ஆனால், அதேநேரம், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வராததைச் சுட்டிக்காட்டி பதிலடி கொடுத்துள்ள அதிமுக ஐடி விங், “சொந்த துறையின் மானிய கோரிக்கைக்கே பயந்து போய் “காய்ச்சல்” என்று பம்மாத்து சாக்கு சொல்லி வீட்டிலேயே போர்த்திக் கொண்டு படுத்துறங்கும் பயந்தநிதி வராததை மறைக்க என்னென்ன உருட்டு.

இதையும் படிங்க: எதிர்பார்ப்பை எகிற வைத்ததா மோகன்லாலின் ‘எம்புரான்’…படத்தின் விமர்சனம் இதோ.!

இன்று வக்பு வாரிய சட்டம் மீதான தீர்மானம் குறித்த விவாதத்தில் Absent ஆன ஸ்டாலின் மாடல் அரசின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இஸ்லாமிய விரோதியா? கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மறைந்த கழக அமைப்புச் செயலாளர் கருப்பசாமி பாண்டியன் பூதஉடலுக்கு அஞ்சலி செலுத்த நெல்லை சென்றுள்ளார் என்பதை நாடறியும்.

முரசொலி தவிர மத்த செய்திகளையும் படித்து அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள் கொத்தடிமைகளே” எனக் காட்டமாகக் கூறியுள்ளனர். ஏற்கனவே, இபிஎஸ் டெல்லி சென்ற நிகழ்வை தொடர்ந்து ஸ்டாலின் சட்டப்பேரவையில் பல்வேறு விதமாக கூறி வருவதும் கவனிக்கப் பெற்றுள்ளது.

Hariharasudhan R

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.