Categories: தமிழகம்

‘வெறும் 3 பேரை வைத்து 15 நாளா பழுது பாக்கறாங்க’ : காட்பாடி ரயில்வே மேம்பால பணிகளை ஆய்வு செய்த அதிமுக பிரமுகர் குற்றச்சாட்டு!!

வேலூர் : காட்பாடி ரயில்வே மேம்பாலத்தில் பணிகள் மந்தமாக நடைபெறுவதாக அதிமுக மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.கே. அப்பு குற்றம்சாட்டியுள்ளார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி ரெயில்வே மேம்பாலம் 25 அடி அகலமும் 300 அடி நீளமும் கொண்டது. வேலூர் மாவட்டத்தையும் ஆந்திர மாநிலத்தையும் இணைத்து வருவாயை ஈட்டித்தரும் பாலமாக விளங்கி வருகிறது.

இந்தப் பாலத்தை பழுது பார்க்கும் பணி கடந்த ஒன்றாம் தேதி துவங்கியது. துவங்கிய நாள் முதல் பாலத்தை பழுதுபார்க்கும் பணியில் 3 பேர் மட்டுமே பணியாற்றி வருகிறார்கள்.

இதனையடுத்து இன்று அதிமுக வேலூர் மாநகர மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே அப்பு சுமார் 50க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகளுடன் காட்பாடி ரயில்வே மேம்பாலத்தை ஆய்வு மேற்கொண்டார்.

இதுகுறித்து எஸ்ஆர்கே எப்போது கூறுகையில் ரெயில்வே மேம்பாலம் மராமத்து பணி தொய்வாக நடப்பதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், விவசாயிகள், வணிகர்கள், காட்பாடி வழியாக திருப்பதி செல்லும் பக்தர்கள், 108 ஆம்புலன்சு என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே அதிகப்படியான பணியாட்களை பணியமர்த்தி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கூறினார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

மாறன் குடும்பத்தில் மோதல்… கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன் நோட்டீஸ் : கோபாலபுரத்துக்கு பேரிடி!

மாறன் குடும்பத்தில் ஏற்பட்ட புகைச்சல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சன் டிவி பங்கு தொடர்பாக கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன்…

12 minutes ago

மூணு மணி நேரம் சாவடிச்சிட்டாங்க?- குபேரா பார்த்துவிட்டு தலையில் அடித்துக்கொண்ட ரசிகர்கள்?

வெளியானது குபேரா தனுஷ் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் “குபேரா”. இத்திரைப்படத்தில் தனுஷுடன் நாகர்ஜுனா,…

27 minutes ago

தனது புது பெயரை அறிவித்த ஆர் ஜே பாலாஜி? சூர்யா 45 டைட்டில் போஸ்டரால் உருவான ஆச்சரியம்!

சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா…

1 hour ago

நித்யானந்தா இந்த நாட்டில்தான் இருக்கிறார்- நீதிமன்றத்தில் சீக்ரெட்டை போட்டுடைத்த சீடர்!

2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…

17 hours ago

படம் வெளியாகனும்னா இதை பண்ணிதான் ஆகணும்- ஆமிர்கானுக்கு ஆர்டர் போட்ட சென்சார் போர்டு?

ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…

18 hours ago

ஆங்கிலம் பேசுபவர்களே! இதை எழுதி வச்சிக்கோங்க- சவால் விட்ட அமித்ஷா!

டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…

19 hours ago

This website uses cookies.