நிர்ணயம் செய்த விலையை விட பீஸ்ட் படத்திற்கு கூடுதலாக கட்டணம் உயர்வு : அரசுக்கு அதிமுக பிரமுகர் கோரிக்கை!!

புதுச்சேரி : விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் வெளியாகவுள்ள புதுச்சேரி தியேட்டர்களில் அரசு அனுமதியின்றி 100 ரூபாய் கட்டணம் உயர்த்தி அறிவிப்பு வெளியிட்ட திரையரங்கு மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் கோரிக்கை வைத்துள்ளார்.

புதுச்சேரி அதிமுக கழக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன், ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் குறித்து அரசியல் ரீதியான விமர்சனங்கள் செய்யும்போது தரம் தாழ்ந்து விமர்சனம் செய்யக்கூடாது என்றும், விமர்சனங்கள் என்பது நாகரிகத்தோடு இருக்க வேண்டும். நாகரிகமுற்ற முறையில் முதலமைச்சர் ரங்கசாமி முதுகெலும்பு இல்லாதவர் என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி விமர்சனம் செய்துள்ளார்.

இதுபோல் விமர்சனம் செய்வதை அவர் நிறுத்திக்கொள்ள வேண்டும். கூட்டணி ஆட்சிக்கு தலைமை தாங்கி நடத்திகொண்டிருக்கும் முதலமைச்சரின் ஆட்சி நீடிக்காது. அவரது நாட்கள் எண்ணப்படுகின்றன என்று கூறும் உரிமை நாராயணசாமிக்கு கிடையாது என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், விஜய் படம் வெளியாக உள்ள புதுச்சேரி தியேட்டர்களில் 5 தினங்களுக்கு அனைத்து ஷோக்களுக்கும் 100 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதாகவும், அரசின் அனுமதி இல்லாமல் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு வைக்கப்பட்ட தியேட்டர் உரிமையாளர்கள் மீது மாவட்ட ஆட்சியர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட தியேட்டர் மீது படம் திரையிட அனுமதி அளிக்க கூடாது என அதிமுக கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் கூறினார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.