Categories: தமிழகம்

அதிமுக பிரமுகர் நள்ளிரவில் படுகொலை.. இபிஎஸ்க்கு நெருக்கமானவர் : அதிமுகவினர் போராட்டம்!!

சேலம், கொண்டலாம்பட்டி பகுதி அ.தி.மு.க., செயலாளர் சண்முகம். 54. இவர், நேற்று இரவு, தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது, தாதகாப்பட்டி இட்டேரி சாலையில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில், மர்ம நபர்கள் அரிவாளில் வெட்டி கொடூரமாக படுகொலை செய்துள்ளனர்.

இதையறிந்த அவரது குடும்பத்தினர் உட்பட அ.தி.மு.க.,வினர் அங்கு குவிந்தனர். மேலும், தகவலறிந்த போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் எத்தனை பேர்? கொலைக்கான காரணம் அரசியல்? , தொழில் போட்டி? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை செய்கின்றனர்.

கொலை செய்யப்பட்ட சண்முகம், கடந்த 2011 முதல் 2016 வரை, சேலம் மாநகராட்சி, கொண்டலாம்பட்டி மண்டல குழு தலைவர் பதவி வகித்தார்.

மேலும், இவர், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்களும் செய்து வந்துள்ளார். அவர் வசிக்கும் பகுதியிலேயே அதிமுக நிர்வாகி சண்முகத்தை, மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்துள்ளனர்.

உறவினர்கள் மற்றும் அதிமுகவினர் நீண்ட நேரம் சடலத்தை எடுக்க விடாமல் போராட்டம் நடத்தினர். அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்திய பின், போலீசார், கொலை செய்யப்பட்ட உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இக்கொலை குறித்து, அன்னதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். இவர், அதிமுக பொதுச் செயலாளர் இ.பி.எஸ்.,க்கு நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.