கடலூர் திருப்பாப்புலியூர் நவநீதம் நகரை சேர்ந்தவர் பத்மாநாதன்.(47) அதிமுக வார்டு அவைத்தலைவராக இருந்து வருகிறார். திருப்பனாம்பாக்கம் பகுதியில் நேற்று இரவு நடந்த கோயில் திருவிழாவில் கலந்துகொண்டு இன்று காலை டூவீலரில் வீடு திரும்பிய பாகூர் இருளன் சந்தை அருகே அவரை காரில் வந்த மர்ம கும்பல் வழிமறித்து சரமரியாக தாக்கி கொலைசெய்து தப்பிச் சென்றனர்.
இதில் சம்பவ இடத்திலேயே பத்மநாபன் உயிரிழந்தார் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாகூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .
படுகொலை செய்யப்பட்ட பத்மநாபன் மீது கடந்த ஆண்டு பாஸ்கர் என்பவரை வெட்டி படுகொலை செய்த வழக்கு நிலுவையில் உள்ளது என்பதும் மேலும் இவர் கவுன்சிலர் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட சீட்டு கேட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் பத்மநாபன் வெட்டி கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர் அரசியல் காரணமாக படுகொலை செய்யப்பட்டாரா அல்லது முன்விரோதம் காரணமாக நடைபெற்றதா இல்லை பாஸ்கர் என்பவரை கொலை செய்த வழக்கில் தொடர்புடையதால் பழிக்கு பழியாக இவரை வெட்டி கொலை செய்தார்களா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.