கோவை: அதிமுக தொண்டர்களை கைது செய்ததை கண்டித்து கோவை ராமநாதபுரம் காவல் நிலையத்தை அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தொண்டர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோவை குனியமுத்தூர் பகுதியில் பொதுமக்களுக்கு தி.மு.க.,வினர் நேற்று ஹாட் பாக்ஸ் உள்ளிட்ட பரிசு பொருட்களை விநியோகம் செய்து வந்தனர். இதனை தொடர்ந்து அதிமுக செய்தி தொடர்பாளர் பேராசிரியர் கல்யாணசுந்தரம் உட்பட அதிமுகவினர் இதனை கண்டித்தனர்.
இந்த சூழலில், கல்யாணசுந்தரம் உட்பட அதிமுகவினர் ஒன்பது பேரை கைது செய்த போலீசார் ராமநாதபுரம் காவல் நிலையத்திற்கு அவர்களை அழைத்து வந்து அமர வைத்தனர்.
இந்த சூழலில் தேர்தல் விதிகளை மீறி பரிசுப் பொருட்களை விநியோகித்தவர்கள் மீது வழக்கு பதியாமல் அதிமுக தொண்டர்கள் மீது போலீசார் பொய் வழக்குப்பதிவு செய்துள்ளதாக கூறி ராமநாதபுரம் காவல் நிலையத்தை எம்.எல்.ஏ.,க்கள் அம்மன் அர்ஜூனன், பி.ஆர்.ஜி.அருண்குமார் மற்றும் கே.ஆர்.ஜெயராம் ஆகியோர் தொண்டர்களுடன் வந்து முற்றுகையிட்டனர்.
மேலும் காவல் நிலைய வளாகத்திலேயே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், போலீசாரின் நடவடிக்கையை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். மேலும், கரூர் மாவட்ட திமுக நிர்வாகிகள் கோவையில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதனிடையே காவல் நிலையத்தில் அமர வைக்கப்பட்ட அதிமுக தொண்டர்களை போலீசார் வெளியேவிட்டனர்.
இதைத்தொடர்ந்து அ.தி.மு.க.,வினரை காரணம் இல்லாமல் கைது செய்துள்ளனர் என்று கூறி பரிசு பொருட்கள் விநியோகம் செய்த தி.மு.க.,வினரை கைது செய்ய வேண்டும் என்றும் அதுவரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என்று கூறி தொடர்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவ இடத்திற்கு குற்றப்பிரிவு துணை ஆணையர் உமா தலைமையிலான போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
காவல் நிலையத்தை அதிமுக தொண்டர்கள் திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் ராமநாதபுரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவின் டாப் இயக்குனர் “பாகுபலி” என்ற பிரம்மாண்ட திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்தவர் ராஜமௌலி. அதுவரையில்…
கடைசி திரைப்படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தை கேவிஎன் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்து…
விசிக கட்சி திருச்சியில் மே-31 நடத்த உள்ள "மதசார்பின்மை காப்போம்" என்ற பேரணி குறித்து வேலூர்,88o திருப்பத்தூர், ராணிப்பேட்டை,9 திருவண்ணாமலை…
பகல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா, பாகிஸ்தானில் உள்ள 9…
அரசியல்வாதி பிரகாஷ் ராஜ் பிரகாஷ் ராஜ் சமீப காலமாகவே பாஜவை விமர்சித்தே பேசி வருகிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு…
இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்படடன. கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல்…
This website uses cookies.