புதுச்சேரி : மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களுக்கு அரசு சார்பில் நிவாரணம் வழங்கக்கோரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மணிகண்டன் தலைமையில் பொதுமக்கள் மின்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி, முத்தியால்பேட்டை தொகுதியில் உள்ள அக்ரஹாரம் பகுதியில் நேற்று மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்தனர். மேலும் இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் உயிரிழந்தவர்கள் மற்றும் மின்சாரம் தாக்கியவர்களுக்கு நிவாரணம் வழங்கி அரசு சார்பில் பணி வழங்கக்கோரி முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வையாபுரி மணிகண்டன் தலைமையில் 50 க்கும் மேற்பட்ட தொகுதி மக்கள் மின்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு நுழைவாயில் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுப்பட்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முற்றுகையில் ஈடுடப்பர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி கலைய செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும் இதேபோல் மின்சாரம் தாக்கியவர்களுக்கு ரூ.2 லட்சம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மணிகண்டன் புதுச்சேரி மின்துறையை தனியார் மயமாக்க கூடாது எனவும் வலியுறுத்தினார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.