புதுச்சேரி : மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களுக்கு அரசு சார்பில் நிவாரணம் வழங்கக்கோரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மணிகண்டன் தலைமையில் பொதுமக்கள் மின்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி, முத்தியால்பேட்டை தொகுதியில் உள்ள அக்ரஹாரம் பகுதியில் நேற்று மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்தனர். மேலும் இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் உயிரிழந்தவர்கள் மற்றும் மின்சாரம் தாக்கியவர்களுக்கு நிவாரணம் வழங்கி அரசு சார்பில் பணி வழங்கக்கோரி முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வையாபுரி மணிகண்டன் தலைமையில் 50 க்கும் மேற்பட்ட தொகுதி மக்கள் மின்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு நுழைவாயில் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுப்பட்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முற்றுகையில் ஈடுடப்பர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி கலைய செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும் இதேபோல் மின்சாரம் தாக்கியவர்களுக்கு ரூ.2 லட்சம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மணிகண்டன் புதுச்சேரி மின்துறையை தனியார் மயமாக்க கூடாது எனவும் வலியுறுத்தினார்.
திருப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கத்திகுத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் படியூர் பகுதியைச்…
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
This website uses cookies.