இதெல்லாம் ஓவரா தெரியல… பாஜக கூட்டணி வேண்டுமென்றால் தாமரை சின்னத்தில் அதிமுக போட்டியிடணுமாம் : கே.பி ராமலிங்கம் கண்டிஷன்!
நாமக்கல் மாவட்டம் அத்தனூர் அருகில் சட்டமன்ற தொகுதி அலுவலக திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பாஜக மாநில துணைத்தலைவரரான கே.பி.ராமலிங்கம் அலுவலகத்தை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த கே.பி.ராமலிங்கம் “டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டம் தற்போது தேவை இல்லாத போராட்டமாக இருக்கிறது.
இந்த விவசாயிகள் போராட்டம் அரசியலுக்காக நடைபெறும் போராட்டம். மேலும், இந்த விவசாயிகளின் போராட்டம் மத்திய அரசின் எதிரியாக உள்ள காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகளின் சொறி, சிரங்கு, அரிப்பாக உள்ளது என கூறினார்.
மேலும், தொடர்ந்து பேசிய அவர் அதிமுகவுடன் கூட்டணி சேர வாய்ப்பு இருக்கிறதா ? என்று பத்திரிக்கையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு, “எனக்கு தெரியவில்லை, அவர்கள் வேண்டாம் என்றார்கள், நாங்களும் வேண்டாம் என்றோம். அதிமுக, பாஜகவோடு கூட்டணி வைக்க வேண்டுமென்றால் அதிமுக தாமரை சின்னத்தில் போட்டியிட வேண்டும்” என்று பதிலளித்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.