தமிழகம்

இனி திமுகவின் பண பலம், அதிகார பலம் எடுபடாது… 234 தொகுதியிலும் அதிமுகதான் : முன்னாள் அமைச்சர் உறுதி!

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம் ஒத்தக்கடையில் நடைபெற்றது

மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா,மாவட்ட பொறுப்பாளரும் கழக அமைப்புச் செயலாளர் காந்தி, கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வி.வி.ஆர் ராஜ்சத்யன் ஆகியோர் ஆலோசனை வழங்கினர்.

மேடையில் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா பேசியதாவது, இன்றைக்கு அதிமுகவை மாபெரும் வெற்றி பாதைக்கு எடப்பாடியார் எடுத்துச் சென்று வருகிறார், வருகின்ற 2026 ஆண்டில் எடப்பாடியார் தலைமையில் அம்மா ஆட்சி அமைவது நிச்சயம் உறுதி.

இதையும் படியுங்க: முதலமைச்சர் போட்ட டெல்டாக்காரன் வேஷம் பல் இளிக்கிறது அண்ணாமலை விமர்சனம்!

எடப்பாடியார் ஆட்சியில் அனைத்து வளத்துடன் வாழ்ந்த மக்கள் இன்றைக்கு உயிர் பயத்துடன் வாழ்ந்து வருகிறார்கள், குறிப்பாக எடப்பாடியார் ஆட்சியில் அமைதி, வளம், வளர்ச்சி என நான்காண்டு காலம் சிறப்பான ஆட்சியை செய்தார்.

ஆனால் இன்றைக்கு ஸ்டாலின் மக்கள் மீது கவனம் செலுத்தவில்லை ,மக்களுக்கு மட்டுமல்லாது இன்றைக்கு காவல்துறை உயிருக்கு கூட பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

தமிழகத்தில் இன்றைக்கு வன்முறை கலாச்சாரமாக, துப்பாக்கி கலாச்சாரமாக மாறிவிட்டது, இன்றைக்கு தோட்டத்து வீட்டில் தனியாக வசிக்கும் வயதான தம்பதி கூட பாதுகாப்பு இல்லாமல் இரட்டை கொலை நடைபெற்று வருகிறது.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜெயக்குமார் படுகொலை செய்யப்பட்டார் அதேபோன்று பகுஜன் கட்சியை சேர்ந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார் இதுவரை குற்றவாளியை கண்டுபிடிக்க முடியவில்லை

நேற்று வரை நாம் 200 தொகுதியில் வரை வெற்றி பெறும் என்ற நிலையில் இருந்து தற்போது திமுக ஆட்சியில் தொடர்ச்சியாக நடைபெறும் அவல நிலையால் 234 தொகுதிகளில நாம் வெற்றி பெறுவோம் என்ற நிலை உருவாகிவிட்டது. குறிப்பாக இந்த கிழக்கு தொகுதியில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு போட்டியிட அதிகமான கழகத்தினர் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

இன்றைக்கு திமுகவை வீழ்த்த வேண்டிய நேரம் வந்துவிட்டது, ஏனென்றால் அம்மா ஆட்சி காலத்தில் தாலிக்கு தங்கம் திட்டம் வழங்கினோம்.

குறிப்பாக ஒரு பவுன் தங்கம் ஒரு லட்ச ரூபாய் விற்றால் கூட அதை நாங்கள் மக்களுக்கு வழங்கும் என்று எடப்பாடியார் கூறினார் ,அந்த திட்டத்தை நிறுத்திவிட்டார். அதேபோன்று பெண்களுக்கான இரண்டு சக்கர வாகன திட்டம், மடிகணினி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நிறுத்திவிட்டனர்,

மக்களுக்கு தேடி மருத்துவம் திட்டமும் மக்களுக்கு எந்த பலனும் தரவில்லை ஆனால் தவறான புள்ளி விபரங்களை கணக்கு காட்டி மக்களை ஏமாற்றி வருகிறார்கள்,கல்வி துறையை எடுத்துக் கொண்டால் அது படுமோசமாக உள்ளது .

இன்றைக்கு திமுகவில் உள்ள கூட்டணி கட்சிகள் எல்லாம் திமுக மீது கடுமையான அதிருப்தியில் உள்ளனர் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். விடுதலை சிறுத்தைகள் உள்ளுக்குள் போராட்டம் நடத்தி வருகிறார்கள் இன்றைக்கு திமுக கூட்டணி பலவீனமான கூட்டணியாக உள்ளது

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்தில் மூன்று தொகுதியில் உள்ளது கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் மேலூர் தொகுதி ,திருப்பரங்குன்றம் தொகுதியில் நாம் வென்றோம். தற்போது வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் மதுரை கிழக்கு தொகுதி சேர்த்து மூன்று தொகுதி நாம் வெல்லுவோம் .

இந்த கிழக்கு தொகுதியில் வருகின்ற தேர்தலில் அதிகார பலம் பண பலம் எதை வைத்தாலும் மக்கள் ஒருபோதும் மனது வைக்க மாட்டார்கள் மீண்டும் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று மதுரை கிழக்கு தொகுதி அதிமுக கோட்டை என்பதை நீங்கள் நிரூபிக்க வேண்டும் என கூறினார்

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சினிமா மட்டுமல்ல… தொழிலிலும் மாஸ் காட்டும் ஆர்யா.. தலைசுற்ற வைக்கும் சொத்து மதிப்பு!

நடிகர் ஆர்யா ஒளிப்பதிவாளர் ஜீவா இயக்கத்தில் வெளியான உள்ளம் கேட்குமே படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். என்னதான் அந்த படத்தில்…

8 minutes ago

விஜய் பாஜகவோட C team? தவெக குறித்து ஓபனாக போட்டுடைத்த பிரபலம்!

தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…

16 hours ago

ஒரு செங்கலைக் கூட இன்னும் எடுத்து வைக்கவில்லை.. திமுக பாணியை கையில் எடுத்த அண்ணாமலை!

மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…

16 hours ago

சந்தானம் போட்ட கண்டிஷனால் கடுப்பான சிம்பு? STR 49 படம் கைமாறியதற்கு காரணம் இதுதானா?

STR 49  “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…

17 hours ago

தனிமனிதனை வேட்டையாடுவதால் வரலாறை மாற்ற முடியாது : கீழடி அமர்நாத் மாற்றம்.. சு.வெங்கடேசன் கண்டனம்!

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…

17 hours ago

கொரேனா பரவல்.. தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கா? உண்மை இதுதான்!

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…

17 hours ago

This website uses cookies.