Categories: தமிழகம்

திமுகவினர் தாக்கியதால் சிகிச்சை பெற்று வரும் அதிமுக பெண் வேட்பாளர் : நேரில் ஆறுதல் கூறிய முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம்!!

விழுப்புரம் : அதிமுக பெண் வேட்பாளர் நேற்று இரவு காவல் நிலையம் அருகே தாக்கப்பட்ட சம்பவத்தில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பெண் வேட்பாளரை முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் சந்தித்து ஆறுதல் கூறி உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என மருத்துவரிடம் கேட்டுக்கொண்டார்

நேற்று நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திண்டிவனம் 13 வது வார்டு வால்டர் ஸ்காட் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தேர்தல் தகராறு தொடர்பாக புகார் அளிக்கச் சென்ற அதிமுக பெண் வேட்பாளர் சுதா அவரது கணவர் சரவணன் மற்றும் அவர் மகன் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் மீது திண்டிவனம் அடுத்த ரோசனை காவல் நிலையத்தில் திமுகவினரால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்க முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தலைமையில் ரோசனை காவல் நிலையம் எதிரில் இரவு ஒன்று திரண்டனர்.. அப்போது காவல் நிலையத்தில் இருந்த விழுப்புரம் சரக டிஐஜி பாண்டியன் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா உள்ளிட்ட அதிகாரிகளிடம் தாக்குதல் நடத்திய திமுகவினரை நாளை காலைக்குள் கைது செய்யாவிட்டால் திண்டிவனம் ஸ்தம்பிக்கும் அளவிற்கு போராட்டம் நடத்துவோம் என்று எச்சரிக்கை விடுத்து முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் உட்பட 200க்கும் மேற்பட்ட அதிமுகவினர் தற்போது கலைந்து சென்றுள்ளனர்..

இந்நிலையில் தாக்குதலில் பலத்த காயமடைந்த அதிமுக பெண் வேட்பாளர் சுதா விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டூ தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இன்று முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் வந்து சிகிச்சை பெற்றுவரும் பெண் வேட்பாளர் சுதாவின் உடல் நலம் குறித்து விசாரித்தார், மேலும் காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து சுதாவிடம் சொல்லி ஆறுதல் கூறினார்.

மேலும் தாக்குதலில் காயமடைந்த அவரது கணவர் மற்றும் மகனுக்கும் ஆறுதல் கூறினார். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்று அரசு மருத்துவர்களுக்கு முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் கோரிக்கை விடுத்தார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஎம் – இந்து முன்னணியினர் இடையே கைக்கலப்பு : சிபிஎம் பிரமுகர் மருத்துவமனையில் அனுமதி!

திண்டுக்கல் தாடிக்கொம்பு பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் காவல்துறை அனுமதியுடன் கிளர்ச்சி பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதையும் படியுங்க:…

23 minutes ago

ரத்த காயத்துடன் இறந்து கிடந்த சிறுமி… தோளில் தூக்கிக் கொண்டு அலைந்த தாய் : கடலூரில் அதிர்ச்சி!

கடலூரில் நடந்த உச்சக்கட்ட கொடூரமான சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூரை சேர்ந்த பாலமுருகன் பச்சையம்மாள் தம்பதிக்கு 2 மகன்,…

54 minutes ago

இபிஎஸ் குறித்து மோசமான கார்ட்டூன்… திமுக ஐடி விங் மீது அதிமுக பரபரப்பு புகார்!

தி.மு.க ஐடி விங்க், தமது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கார்டூன் பதிவை ஜூன் 17ஆம் தேதி மாலை வெளியிட்டது. அந்த…

2 hours ago

Second Half நல்லாதான் இருக்கு;; ஆனா First Half ? – குபேரா படம் பத்தி என்ன பேசிக்கிறாங்க?

வெளியானது குபேரா சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள “குபேரா” திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.…

2 hours ago

90 கோடி எடுத்து வைங்க- கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கும் ஏ ஆர் முருகதாஸ் படக்குழு! என்னதான் பிரச்சனை?

படுதோல்வியடைந்த சிக்கந்தர்  ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் கடந்த மார்ச் மாதம் வெளியான “சிக்கந்தர்”…

3 hours ago

14 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை.. தாலி கட்டிய ரவுடி கைது!

காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான நவமணி வயது 31 என்பவர் அதே பகுதியில் ஒன்பதாம்…

3 hours ago

This website uses cookies.