அஜித்தை மட்டம் தட்டியதா படக்குழு..? பல வருட வதந்திக்கு கிடைத்த முற்றுப்புள்ளி..!

Author: Rajesh
6 May 2022, 1:08 pm
Quick Share

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் மிக முக்கியமானவர் தான் நடிகர் அஜித். அவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர். அவரது திரைப்படங்கள் தியேட்டர்களில் சிறந்த ஓப்பனிங் வசூலை குவித்து வருகின்றன. எந்த ஒரு சினிமா பின்புலம் இல்லாமல் வந்ததையும் வசனங்கள் மூலமாகவோ அல்லது பாடலின் மூலமாகவோ சில படங்களில் அவர் தெரிவித்து வந்துள்ளார். அவர் வளர்ந்து வந்த காலத்தில் அஜித்திற்கு ஒரு அவமானம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாக வந்த வண்ணம் இருந்தன.

அதாவது அஜித், வளர்ந்து வந்த கால கட்டத்தில் நடித்த திரைப்படம் கல்லூரி வாசல். இந்த திரைப்படத்தில் கதாநாயகன் பிரசாந்த். அஜித் இரண்டாம் கதாநாயகனாக நடித்திருப்பார். அப்போது ஓர் புகைப்படம் ஒன்று வெளியாகி இருந்தது. அதில் பிரசாந்துக்கு மாலை அணிவித்து இருப்பது போலவும், அஜித் தலைகுனிந்து இருப்பது போலவும் காட்டப்பட்டிருந்தது.

அதனை அப்போது பலர் பிரசாந்த் தான் அப்போது டாப் ஸ்டார். அஜித் அப்போதுதான் வளர்ந்து வருகிறார். அதனால் அவருக்கு மாலை அணிவிக்க படவில்லை. பிரசாந்துக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதனால் அந்த இடத்தில் அஜித் அவமானப்படுத்தப்பட்டார் என்ற வதந்தியை பலர் பரப்பினர். இது உண்மையா பொய்யா என்று தெரியாமல் ரசிகர்கள் பல வருடங்களாக இருந்தனர். தற்போது அதற்கு ஓர் விடை கிடைத்துள்ளது. அதனை பிரசாந்தின் அப்பாவும் இயக்குனருமான தியாகராஜன் அண்மையில் ஒரு பேட்டியில் இது பற்றி தெரிவித்துள்ளார்.

அதாவது இருவரும் ஷூட்டிங் சமயத்தில் அந்த இடத்தில் இருந்தது உண்மைதான். அப்போது பிரஷாந்திற்கு பிறந்தநாள் விழா. அதன்காரணமாக பிரசாந்தின் ரசிகர்கள் அவருக்கு மாலை அணிவித்து அதனை கொண்டாடினர். அப்போதுதான் அஜித் உடன் இருந்தார். இது அஜித்தை திட்டமிட்டு அவமானப் படுத்துவதற்காக படவிழாக்களில் எடுக்கப்பட்ட புகைப்படம் அல்ல. அது பிரசாந்தின் பிறந்தநாள் விழா என்று திட்டவட்டமாக தெரிவித்தார் அஜித். எப்போதும் அஜித் தலை குனிய மாட்டார் என்றும் நடிகர் தியாகராஜன் தெரிவித்தார்.

பிரசாந்தின் அப்பாவே இப்படி கூறியதால் அந்த வதந்திக்கு தற்போது முற்றுப்புள்ளி கிடைத்துள்ளது. இந்த விஷயத்தின் மூலம் அஜித் அவமானபடுத்தப்படவில்லை என்பது தற்போது தெளிவாகியுள்ளது.

Views: - 811

0

0