அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை காண வந்த பார்வையாளர்கள் மீது போலீசார் தடியடி நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி மிக விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த போட்டியை காண தமிழகம் முழுவதிலிருந்தும் ஏராளமான பார்வையாளர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
ஜல்லிக்கட்டு வாடிவாசலை காண வேண்டும் என பார்வையாளர்கள் ஆர்வத்துடன் வாடி வாசலில் இருக்கும் பகுதியை நோக்கி குவிந்து வருகின்றனர். குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஏணையோர் ஏமாற்றத்தில் விரக்தி அடைந்தனர்.
சிலர் எப்படியாவது ஜல்லிக்கட்டு போட்டியை காண வேண்டும் என காவல்துறை அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வேலி பகுதியை நோக்கி கூட்டம் கூட்டமாக முண்டியடித்தனர். கூட்டம் தொடர்ந்து குவிந்து வந்ததை அடுத்து கூட்டத்தை கலைக்க போலீசார் திடீரென தடியடி நடத்தினர்.
அப்போது, கூட்ட நெரிசலில் சிக்கி மயங்கிய நபருக்கு ஆம்புலன்சில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஜல்லிக்கட்டு போட்டியை காண ஆர்வத்துடன் தமிழகம் முழுவதிலிருந்தும் கேரளாவில் இருந்தும் வருகை தந்த பார்வையாளர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்தனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.