கன்னியாகுமரி ; கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெற உள்ள தோள்சீலைப் போராட்ட நினைவு மாநாட்டை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் புறக்கணிக்க வேண்டும் என அகில பாரத இந்து மகா சபா கோரிக்கை விடுத்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் வரும் ஆறாம் தேதி தோள்சீலை போராட்ட 200வது நினைவு மாநாடு நடைபெற உள்ளது. இதில், தமிழக முதல்வர் கலந்து கொள்ள உள்ளதாக அறிவிக்கப்படும் வெளியாகி உள்ளன. இந்த நிலையில், அகில பாரத இந்து மகா சபா மாநில தலைவர் பாலசுப்பிரமணியன், அமைப்பு நிர்வாகிகளுடன் இன்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.
அந்த மனுவில், “கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெற உள்ள தோள்சீலைப் போராட்ட நினைவு மாநாட்டு மூலம் தேவையற்ற ஜாதி மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், தமிழக முதலமைச்சர் இதனைப் புறக்கணிக்க வேண்டும்,” எனக் கேட்டுக் கொள்ளப்பட்டது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அகில பாரத இந்து மகா சபா மாநில தலைவர் பாலசுப்பிரமணியன், 200 ஆண்டுகளுக்கு முன்னர் வெள்ளைக்காரர்களின் சூழ்ச்சியால் ஜாதி பிரச்சனையை உருவாக்கி, மத மாற்றும் சூழலை உருவாக்கினார். மன்னர் ஆட்சி காலத்தில் திருவிதாங்கூர் மன்னரை கட்டுக்குள் வைத்து மதமாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்நிலையில் 200 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சம்பவத்தை மீண்டும் நினைவுபடுத்தி ஜாதி துவேசத்தை உருவாக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டத்திற்காக நூறாவது நினைவு ஆண்டு, 150ஆவது நினைவு ஆண்டு என எதுவுமே கொண்டாடப்படாத வேளையில், 200வது ஆண்டு நினைவு மாநாடு நடத்துவது பல்வேறு பிரச்சனைகளை உருவாக்கும் என்பதால், தமிழக முதல்வர் இதில் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்க வேண்டும், என்றும் அவர் தெரிவித்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.