Categories: தமிழகம்

வழிப்பறி கொள்ளையனுக எல்லாம் எங்க ஊர்ல தான் இருக்காங்க : அமைச்சர் துரைமுருகன் பரபரப்பு பேச்சு!!

வேலூர் மாவட்டம் காட்பாடி ஓடைபிள்ளையார் கோவில் அருகே அருகே ரூ15 லட்சம் மதிப்பில் புதிய பயணியர் நிழல் கூடம் மற்றும் காட்பாடி அடுத்த செங்குட்டை பகுதியில் மற்றும் 8 லட்சம் மதிப்பில் நியாய விலை கடைகளை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் அமைச்சர் துரைமுருகன் ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் அமைச்சர் துரைமுருகன், தமிழ்நாட்டில் கடந்த காலங்களில் நியாய விலைக் கடைகளில் வழங்கப்பட்ட பொருட்கள் தரமானதாக இருந்ததில்லை என பொதுமக்கள் தெரிவித்து வந்தனர்.

ஆனால் தற்போது தமிழ்நாட்டில் அனைத்து நியாய விலை கடைகளிலும் வழங்கப்படும் பொருட்கள் தரமான பொருட்களாக இருக்க வேண்டுமென முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

அதன் காரணமாக அனைத்து நியாய விலை கடைகளிலும் தரமான பொருட்கள் தற்பொழுது விநியோகிக்கப்பட்டு வருகிறது.

காட்பாடியில் 200 படுக்கையில் கொண்ட பல்நோக்கு மருத்துவமனை இந்தாண்டு துவக்கப்படும். காட்பாடியில் கூடுதலாக ரயில்வே அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காட்பாடியில் குற்ற சம்பவங்களை தடுக்க கூடுதலாக காவல் நிலையம் போன்ற அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு காட்பாடியில் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என்றும்
இதன் மூலம் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் அமைச்சர் துரைமுருகன் பேசினார்

இந்த நிகழ்ச்சியில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் காட்பாடி வடக்கு பகுதி திமுக செயலாளர் வன்னியராஜா வேலூர் மாநகராட்சி துணை மேயர் சுனில் குமார் வேலூர் மாநகராட்சி ஒன்றாவது மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜா காட்பாடி ஒன்றிய பெருங்குழு தலைவர் வேல்முருகன் துணைத்தலைவர் சரவணன் திமுக பகுதி இளைஞரணி துணை அமைப்பாளர் ஜி.பி.கமல்ராஜ், 5-வது வட்டச் செயலாளர் விநாயகம் வேலூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் அன்பு, டீட்டா சரவணன், சித்ரா மகேந்திரன், சித்ரா லோகநாதன், விமலா சீனிவாசன், லோகநாதன், பூஞ்சோலை சீனிவாசன் உட்பட பலர் மற்றும் திமுகவினர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?

நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…

12 hours ago

வெகு கால இடைவெளிக்குப் பிறகு டிவி பேட்டியில் தோன்றும் அஜித்! அதிசயம் ஆனால் உண்மை!

பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…

13 hours ago

Bye Bye Stalin என மக்கள் சொல்லும் போது சட்டை கிழித்து தவழாமல் இருந்தால் சரி : இபிஎஸ் விமர்சனம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…

14 hours ago

சிம்புவே ரெடி; ஆனா ஷூட்டிங் ஆரம்பிக்கல! இயக்குனர் செய்த காரியத்தால் தள்ளிப்போகும் STR 49?

STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…

15 hours ago

அஜித் விருது வாங்கிய நேரம்.. ஹீரா குறித்து அவதூறு : பின்னணியில் அரசியலா?

நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…

15 hours ago

அவருக்கு நான் அம்மாவா? கடுப்பான கஸ்தூரி : எந்த நடிகர்னு தெரியுமா?!

தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…

16 hours ago

This website uses cookies.