தமிழகம்

திமுகவைப் பாராட்டிய தேமுதிக.. கூட்டணியில் நடப்பது என்ன? உண்மை இதுதான்!

தொகுதி மறுவரையறை குறித்த அனைத்துக் கட்சி கூட்டத்தை தேமுதிக பாராட்டிய நிலையில், அதிமுக உடனான கூட்டணியில் விரிசலா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சென்னை: தமிழ்நாடு அரசு மிகச் சிறப்பான கூட்டத்தைக் கூட்டியுள்ளது. மாநில அரசின் தீர்மானத்தை தேமுதிக முழுமையாக ஆதரிக்கிறது” என, நேற்று தொகுதி மறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பிறகு தேமுதிக அவைத்தலைவர் இளங்கோவன் கூறினார்.

இது அனைத்துக் கட்சிகளைப் போன்ற ஆதரவு பேச்சுதான் என எடுத்துக் கொண்டாலும், இதுநாள்வரை திமுகவை கடுமையாக விமர்சித்து வந்த தேமுதிக, தற்போது திமுகவைப் பாராட்டியிருப்பதைப் பார்க்கும்போது, சற்று தேமுதிக இடம் பெற்றுள்ள கூட்டணியையும் பார்க்க வேண்டியுள்ளது.

ஏனென்றால், நேற்று முன்தினம் சேலம், ஆத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமியிடம், தேமுதிகவுக்கு ஒரு ராஜ்ய சபா சீட் ஒதுக்கப்படுகிறதா எனக் கேள்வியெழுப்பப்பப்பட்டது. அதற்கு, “ராஜ்யசபா சீட் வழங்குவதாக அதிமுக கூறியதா? யார் யாரோச் சொல்வதை வைத்து எங்களிடம் கேட்க வேண்டாம்.

தேர்தலில் என்ன வெளியிட்டோமோ, அப்படித்தான் நடந்து கொள்கிறோம்” எனப் பதிலளித்தார். இதற்கு எடப்பாடியின் பதில் மட்டுமே காரணமல்ல, அதற்கு முன்னதாக, அதாவது பிப்ரவரி 12ம் தேதி ராஜ்ய சபா சீட் குறித்து பேசிய தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், “அதிமுக உடன் கூட்டணி அமைத்தபோதே கையெழுத்திடப்பட்டு, உறுதி செய்யப்பட்டதுதான் ராஜ்ய சபா பதவி.

ராஜ்ய சபா தேர்தலுக்கான நாள் வரும் போது, தேமுதிக சார்பில் யார் ராஜ்ய சபா செல்ல உள்ளார்கள் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்” எனத் தெரிவித்திருந்தது தான், எடப்பாடியின் பதில், இளங்கோவனின் பாராட்டு என அனைத்தையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

இதையும் படிங்க: ஊரையே காலி செய்கிறேன்.. திடீரென புறப்பட்ட பிரபலம்.. என்ன காரணம்?

அது மட்டுமல்லாமல், தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எடப்பாடி பழனிசாமி பதில் அளித்த அன்றே, விஜயகாந்தின் அதிகாரபூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில், ‘சத்தியம் வெல்லும் நாளை நமதே’ எனப் பதிவிடப்பட்டு, பின்னர் உடனடியாக அது நீக்கப்பட்டது.

இந்த நிலையில், ராஜ்ய சபா இடம் குறித்த இபிஎஸ்சின் பதில், அதிமுக – தேமுதிக கூட்டணியில் விரிசலை உண்டாக்கியிருக்கிறதா என்ற கேள்வி எழுந்த நிலையில்தான், இளங்கோவன் இப்படி பேசியுள்ளார். இது ஒருபுறம் இருந்தாலும், பிரேமலதாவைச் சமாதானப்படுத்த அதிமுக மூத்த தலைவர்கள் முற்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

Hariharasudhan R

Recent Posts

படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!

ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…

21 hours ago

திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…

23 hours ago

தலைக்கேறிய மது போதையில் உளறிய குட் பேட் அக்லி நாயகி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…

23 hours ago

குக் வித் கோமாளியில் சொல்வதெல்லாம் உண்மை? வெளிவந்தது போட்டியாளர்களின் பெயர்கள்!

தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…

23 hours ago

தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!

கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…

24 hours ago

கனிமொழி எம்பி தேசவிரோதியா? பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சால் பரபரப்பு!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…

1 day ago

This website uses cookies.