விழுப்புரம் நகர மன்ற கூட்டத்தில் கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் நகர மன்ற தலைவியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.
விழுப்புரம் நகர பகுதிகளில் கவுன்சிலர்களுக்கு தெரியாமல் பணிகளை டெண்டர் விட்டதாக கூறி திமுகவை சேர்ந்த நகர மன்ற தலைவியை எதிர்த்து கூட்டணி கட்சியினர் வெளியில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சியினருடன் அதிமுக, பாஜக உள்ளிட்ட 17 பேர் கூட்ட அரங்கிற்கு வெளியே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்தநிலையில் நகர மன்ற கூட்டத்திற்கு வந்த நகர மன்ற தலைவியை நோக்கி கூட்டணி கவுன்சிலர்கள் சென்று முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது காங்கிரஸ் கட்சி கவுன்சிலர் சுரேஷ் ராம், நகர மன்ற தலைவியின் அருகே சென்று நகர மன்ற தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று கூட்டணி கட்சி கவுன்சிலரே கோஷமிட்டதால் பரபரப்பு நிலவியது.
பின்னர் நகர மன்ற தலைவி தமிழ்ச்செல்வி அனைத்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது என்று கூறிவிட்டு சென்று விட்டார். அப்போது 17 கவுன்சிலர்கள் நகர மன்ற தலைவியை பதவி விலகக் கோரி முழக்கமிட்டனர் இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
திமுகவை சேர்ந்த நகர மன்ற தலைவிக்கு எதிராக எதிர்க்கட்சியினருடன் கூட்டணி கட்சியினரும் இணைந்துள்ளதால் திமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று கமல்ஹாசன் கூறிய நிலையில் அவர்…
திருப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கத்திகுத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் படியூர் பகுதியைச்…
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
This website uses cookies.