ஆம்பூர் பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பேருந்தில் என்ஜினில் புகை வந்ததால் பேருந்தில் இருந்து இறங்கி பயணிகள் ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பேருந்து நிலையத்தில் ஆம்பூரில் இருந்து பச்சகுப்பம் மேல்பட்டி வழியாக குடியாத்தம் செல்லக்கூடிய அரசு பேருந்து ஆம்பூர் பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது 20க்கும் மேற்பட்ட பயணிகள் பேருந்தில் அமர்ந்திருந்தனர். அப்போது, பேருந்து என்ஜினில் இருந்து திடீரென புகை வந்ததால் பேருந்தில் இருந்த பயணிகள் பேருந்தை விட்டு அலறியடித்து இறங்கி ஓடியுள்ளனர்.
மேலும் படிக்க: நீர்நிலைகளில் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை… அத்துமீறினால் அபராதம், சிறை தண்டனை என அறிவிப்பு!!!
இதனைக் கண்ட பேருந்து ஓட்டுநர் செய்வதறியாமல் திகைத்து இன்ஜினில் புகை வருவதை சரி செய்ய முயன்ற போது, பேருந்தில் உதிரிபாகங்கள் (ஸ்பேர் பார்ட்ஸ்) இல்லாததால் பேருந்து நிலையத்திலிருந்த தனியார் பேருந்து ஓட்டுநரிடம் கேட்டு பெற்று பின்னர் அங்கிருந்த சக ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் இன்ஜினில் வந்த புகையை அனைத்து சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இதனால் ஆம்பூரில் இருந்து குடியாத்தத்திற்கு 11.50க்கு செல்லக்கூடிய அரசு பேருந்து சுமார் 2:30 மணி நேரமாக பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டதால், பச்சகுப்பம், அழிஞ்சிகுப்பம், மேல்பட்டி, வளத்தூர், செம்பேடு, குடியாத்தம் ஆகிய பகுதிகளுக்கு செல்லக்கூடிய பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாகினர். மேலும், பேருந்து நிலையத்திலிருந்து பயணிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் அச்சத்துக்குள்ளாகினர்.
மேலும் அரசு பேருந்துகளில் ஏற்படும் பழுதுகளை சரி பார்க்க கூட உதிரி பாகங்கள் இல்லாத அவல நிலை நிலவி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.