கரூரில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வி.சி.க தலைவர் திருமாவளவன் திருச்சிக்கு நேற்று இரவு வருகை தந்தார்.
திருச்சியிலிருந்து கரூர் புறப்படுவதற்கு முன்பாக தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்த அவர், எதிர்க்கட்சிகள் ஓர் அணியில் திரள வேண்டும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதிலிருந்து அவர் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வலுவாக இருப்பதாக ஒப்புக்கொண்டு உள்ளார். அதே போல்ச் எதிர்க்கட்சிகள் இன்னும் ஓர் அணியாக வடிவம் பெறவில்லை என்பதையும் அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.
இதையும் படியுங்க: யாரும் சாப்பிடாதீங்க.. POISON இருக்கு.. கோவை பிரபல பிரியாணி கடை உணவில் பல்லி… ஷாக் வீடியோ!
பா.ஜ.க – அதிமுக கூட்டணி ஆளுக்கொரு திசையில் பயணிக்கும் நிலையில் உள்ளதையும் அவர் ஒப்புக் கொண்டுள்ளார். திமுக தலைமையிலான கூட்டணி தான் கூட்டணி என்கிற வடிவத்தோடு வலுவாக இயங்குகிறது.
அதிமுக பாஜக கூட்டணி வைத்திருந்தாலும் கூட அவர்களுக்கு இடையே ஒரு பிணைப்பு ஏற்படவில்லை. இந்த நொடி வரை தமிழகத்தில் ஒரே ஒரு கூட்டணி தான் இருக்கிறது அது திமுக தலைமையிலான கூட்டணி என்பதையும் நயினார் நாகேந்திரன் ஒப்புக்கொண்டுள்ளார்.
திமுக கூட்டணி மீது பாஜகவிற்கு இருக்கும் பயத்தை திமுக கூட்டணிக்கு இருப்பதாக நயினார் நாகேந்திரன் மாற்றி பேசுகிறார்.கூட்டணி அறிவித்த பின்பும் கூட பாஜக – அதிமுக இணைந்து செயல்படுவது போல் எந்த தோற்றமும் தெரியவில்லை.
அமித்ஷா கூட்டணி ஆட்சி என கூறிவிட்டு சென்றார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி நாங்கள் அப்படி கூறவில்லை என்கிறார் அதிலிருந்தே அவர்களுக்குள் முரண் இருப்பது தெரிகிறது என்றார்.
மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் தமிழில் இருந்துதான் கன்னடம் தோன்றியது என்று…
தமிழில் இருந்து தான் கன்னடம் பிறந்தது என தக் லைஃப் பிரமோஷன் நிகழ்ச்சயில் நடிகர் கமல் பேசியது பெரும் சர்ச்சையானது.…
டாப் ஹிட் படங்கள் எஸ்.ஜே.சூர்யா இயக்கிய முதல் திரைப்படம் “வாலி”. இதில் அஜித்குமார் கதாநாயகனாக நடித்திருந்தார். இத்திரைப்படம் மாஸ் ஹிட்…
மதுரை கோச்சடை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து மதுரை தேனி திண்டுக்கல் ஆகிய சட்டமன்றத் தொகுதியில் நிறைவு…
முன்னணி காமெடி நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக வலம் வருகிறார் யோகி பாபு. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான…
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாட்டில் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகள் பெரிதும்…
This website uses cookies.