திருப்பூர் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மங்கலம் அருகே உள்ள நல்லம்மன் கோவில் செல்லும் வழியில் உள்ள சிறு பாலம் உடைந்து கோவிலுக்கு செல்லும் வழி துண்டிக்கப்பட்டுள்ளது.
திருப்பூரை அடுத்த மங்களம் அருகே நொய்யல் ஆற்றில் நல்லம்மன் தடுப்பணை உள்ளது. சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்டுள்ளதாக கருதப்படுகின்ற இந்த தடுப்பணை, கட்டப்படும் போது நடுவில் உடைந்து கொண்டே இருந்ததால் நல்லம்மண் என்ற சிறுமி அங்கு உயிர்த்தியாகம் செய்தார்.
தொடர்ந்து அணை உடையாமல் இருந்தது. எனவே நல்லம்மனுக்கு அணை நடுவே கோவில் கட்டி வழிபட்டு வந்தனர். இந்த அணை ஆயிரம் ஆண்டுகளை கடந்து கம்பீரமாக காட்சி அளிக்கிறது.
நல்லம்மன் தடுப்பணையில் தடுக்கப்படுகின்ற தண்ணீர் ராஜ வாய்க்கால் மூலமாக சின்ன ஆண்டிபாளையம் குளத்துக்கு சென்று பாசனத்திற்கு பயன்படுத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில் தற்போது பெய்கின்ற தொடர் மழை காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. வழக்கமாக தண்ணீர் இன்றி வறண்டு காணப்படும் இந்த தடுப்பணையில், தற்போது மழை வெள்ளம் அருவியாக கொட்டுகிறது.
இந்த வெள்ளப் பெருக்கு காரணமாக நல்லம்மன் கோவிலுக்கு செல்கின்ற சிறு பாலம் ஒரு பகுதி உடைந்து தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு விட்டது.
இதனால் கோவிலுக்கு செல்லும் பாதை துண்டிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக மழை வரும் பட்சத்தில் நல்லம்மன் கோவிலும் மூழ்கி விடும் நிலை ஏற்பட்டுள்ளது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.