கோவை மாவட்டம் ஆனைகட்டி, மாங்கரை, தடாகம், ஆகிய பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக காணப்படும். குறிப்பாக காட்டு யானைகளின் நடமாட்டம் இங்கு அதிகமாக காணப்படும், என்பதால் மாங்கரையில் இருந்து ஆனைகட்டி மலை பாதையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த கவனத்துடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தூமனூர் பகுதியை சேர்ந்த ராஜப்பன்(48) என்பவர் சேம்புக்கரை பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது பூதிமேடு பகுதியில் எதிரில் வந்த காட்டுயானை அவரை துரத்தியதாக தெரிகிறது.
இதில் நிலை தடுமாறிய அவரை அந்த காட்டுயானை தாக்கியதில் ராஜப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் ராஜப்பன் உடலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் மாவட்ட வன அலுவலரின் அறிவுரைப்படி அவரது குடும்பத்தினருக்கு உடனடி நிவாரண தொகையாக 50,000 ரூபாய்க்கான காசோலை வழங்கப்படும் என வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.