சமயபுரம் மாரியம்மன் கோவில் அம்மன் திருவீதி விழா செல்லும் போது வழிமறித்து சென்ற திருச்சி மாநகராட்சி ஆணையரின் காரால் பக்தர்கள் பெரும் அதிர்ச்சி – ஐ ஏ எஸ் அதிகாரியின் செயலால் பக்தர்கள் வேதனை.
சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் வருடம் தோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறும். அதன் ஒரு பகுதியாக தைப்பூச திருவிழா நேற்று 26 ஆம் தேதி கொடியேற்றுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இரண்டாம் நாளான இன்று சமயபுரம் மாரியம்மன் கோவில் உற்சவர் அம்மன் வசந்த மண்டபத்தில் இருந்து கடைவீதி மற்றும் தேரோடும் வீதி வழியாக சமயபுரம் மாரியம்மன் கோவிலை சென்றபோது ஆயிரக்கணக்கான பக்தர்கள் உற்சவர் அம்மனுக்கு முன்னதாக சென்று கொண்டிருந்தனர்.
மேலும் வழி நெடுக பக்தர்கள் உற்சவர் அம்மனை தரிசனம் செய்தனர். அப்போது கடைவீதியில் எதிர்ப்புறம் காரில் இருந்த திருச்சி மாநகராட்சி ஆணையர் இரா. வைத்தியநாதன் திடீரென பக்தர்கள் கூட்டம் நடுவே காரை ஓட்டுநர் ஓட்டி சென்றது பக்தர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனால் உற்சவர் அம்மன் சிறிது நேரம் கடைவீதியிலேயே நின்றது. மேலும் ஐஏஎஸ் அதிகாரியை இதுபோன்ற செயலால் பொதுமக்களும் பக்தர்களும் மிகவும் வேதனை அடைந்தனர்.
மேலும் சமயபுரம் கடைவீதி பகுதியில் இருபுறமும் கடைகள் ஆக்கிரமிப்புகள் இருந்ததாலும் சமயபுரம் மாரியம்மன் உற்சவர் அம்மன் வரும்பொழுது எதிர் திசையில் வாகனங்களை நிப்பாட்டாமல் வந்ததால் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
காவல்துறையினர் கண்டுகொள்ளாமல் இருந்தது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.