Categories: தமிழகம்

அதிகாலை வீட்டுக்குள் புகுந்து மூதாட்டி கொலை… விசாரணையில் பகீர் : வெளியான சிசிடிவி காட்சி.. திருப்பூரில் பயங்கரம்!!

திருப்பூரில் மூதாட்டி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு 5 சவரன் நகை கொள்ளையடித்து சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருப்பூர் எஸ்.வி காலனி மெயின் ரோடு, டி.எஸ்.ஆர் லே அவுட் பகுதியை சேர்ந்த முத்துசாமி. அவரது மனைவி சந்திராமணியுடன் (வயது 67) தனியாக வீட்டில் வசித்து வரும் நிலையில், இவர்களது மகன் தாயின் வீட்டருகே கெமிக்கல் கம்பனி நடத்தி கொண்டு, கே.பி.என்.காலனியில் குடியிருந்து வருகிறார்.

இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் சந்திரமணி காலை 4.50 மணிக்கு எழுந்து வீட்டின் முன் பக்க கேட்டை திறந்து வைத்துவிட்டு, கணவனுக்கு உணவு தயார் செய்து கொண்டிருந்தவர் நீண்ட நேரமாக வெளியே வராததால் சந்தேகமடைந்த அவரது கணவர் முத்துசாமி சென்று பார்த்த போது, கழுத்தறுத்து இரத்த வெள்ளத்தில் சடலமாக இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தவர் பொது மக்கள் உதவியுடன் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்க்கு வந்த வடக்கு போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடி காட்சிகளை பார்த்த போது. 55 வயது மதிக்கதக்க மர்ம நபர் வீட்டிற்க்குள் சென்றுவிட்டு சிறிது நேரத்தில் வெளியேறிய காட்சிகள் பதிவாகி இருந்தது.

இதையடுத்து மூதாட்டியின் கழுத்தை அறுத்து அவர் அணிந்திருந்த 5 சவரன் நகையை பரித்து சென்றது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தற்போது சிசிடிவி காட்சிகளை ஆதாரமாகக் கொண்டு போலீசார் குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர். அதிகாலை மூதாட்டியை கழுத்தறுத்து 5 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

ஆஹா, இது செம கம்பேக்! சின்மயியை மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்த டி இமான்…

பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…

1 day ago

ராயப்பன் கேரக்டர் உண்மையிலேயே வாழ்ந்தவர்- யார் அந்த நபர்? சீக்ரெட்டை உடைத்த அட்லீ

டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…

1 day ago

நாச்சியப்பன் கடையில் பெயரை பொறித்து இனியும் மக்களை ஏமாற்ற முடியாது.. அண்ணாமலை சாடல்!

பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…

2 days ago

நல்ல வேளை இந்த பாட்டை படத்துல வைக்கலை, சுத்தமா செட் ஆகலை? “முத்தமழை” வீடியோ பாடலால் ரசிகர்கள் ஏமாற்றம்

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…

2 days ago

கழிவறையில் ரகசிய கேமரா… வீடியோ எடுத்து ஆசைக்கு இணங்க பெண் போலீசுக்கு மிரட்டல்..!!

கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…

2 days ago

இணையத்தில் டைட்டில் கசிந்ததால் படத்தின் பெயரையே மாற்றிய சூர்யா 45 இயக்குனர்? அடடா…

சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…

2 days ago

This website uses cookies.