Categories: தமிழகம்

’என்ன அண்ணாமலை.. உன்னையும் சேர்த்துதான்..’ நீ கூட களத்துக்கு போறதில்ல.. அன்புமணி பரபரப்பு பேச்சு!

கட்சியின் ஒன்றியச் செயலாளர்களே களத்திற்குச் செல்வதில்லை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சேலத்தில் நடந்த கூட்டத்தில் கூறியுள்ளார்.

சேலம்: சேலத்தில், பாமக மக்கள் சந்திப்புக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இருவரும் அருகருகே அமர்ந்திருந்தாலும், ஒருவரையொருவர் முகம் காட்டியதில்லை எனக் கூறினார்.

இதனையடுத்து, கூட்டத்தில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “இதே மாவட்டத்தில் (சேலம்) தனியாக நின்று இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறோம். இப்போது கூட்டணியில் இருந்தும் இரண்டு தொகுதிகளைத்தான் வென்றுள்ளோம். அப்படியென்றால் நாம் வளர்ந்திருக்கிறோமா?

நமக்கு பலம் இருக்கிறது, இளைஞர் சக்தி இருக்கிறது, வழிகாட்ட ராமதாஸ் இருக்கிறார். ஆனால், அன்றைக்கு இருந்த உழைப்பு நம்மிடம் இல்லை. அன்று எந்த எதிர்பார்ப்பும் இன்றி, களத்தில் இறங்கி வேலை செய்தோம். இன்று கிராமங்களுக்குப் போவதே கிடையாது.

தமிழ்நாட்டில் யாரைக் கேட்டாலும் பாமக சிறந்த கட்சி எனச் சொல்வார்கள். நல்ல கொள்கை, கோட்பாடு, செயல்திட்டங்கள், தொலைநோக்குப் பார்வை உள்ள கட்சி என்று சொல்வார்கள். ஆனால், இந்தச் செய்திகளை களத்தில் கொண்டு போய்ச் சேர்ப்பதில்லை. கட்சியின் ஒன்றியச் செயலாளர்களே களத்திற்குச் செல்வதில்லை.

நாடாளுமன்றத் தேர்தலில் எவ்வளவு பெரிய வருத்தம் தெரியுமா? சேலம் மக்களவைத் தொகுதியில் ஆறு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. அவற்றில் நான்கு தொகுதிகளில் நாம் எம்எல்ஏவாக இருந்திருக்கிறோம். ஆனால், நமக்கு கிடைத்தது சொற்ப வாக்குகள் தான். நம் வாக்கு, நம் உழைப்பு எங்கே போனது?

நாம் இழந்த வாக்குகளையெல்லாம் மீண்டும் வர வைக்க வேண்டும். சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் இருக்கின்றன. நம்மைப் போல யாராலும் உழைக்க முடியாது, ஆனால் ஏதோ ஒரு தொய்வு நம்மிடம் இருக்கிறது. மனதுக்குள் இருக்கும் வெறியை இன்னும் 10 மாதங்களில் நாம் பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க: இன்னும் ஒரு போஸ்டிங் போடுங்க.. உத்தரவிட்ட விஜய்.. நாளை முக்கிய அறிவிப்பு?

தனியாகப் போட்டியிட்டால் கூட சேலம் மாவட்டத்தில் உள்ள எட்டு தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். பாமகவுக்கு அதிக எம்எல்ஏக்களை கொடுத்துள்ள மாவட்டம் சேலம். எவ்வளவோ செய்திகளை மக்களிடம் சொல்லலாம்.

என்ன அண்ணாமலை அப்படியே பாக்குற. உன்னையும்தான் சேர்த்துச் சொல்றேன்.. உன் தொகுதியில் வாங்குனியே ஓட்டு, 52 ஆயிரம் வாக்குகள் வாங்கிய தொகுதி அது. இன்னும் 10 மாதங்கள் தான் இருக்கின்றன. வெறி வர வேண்டும். பல்லைக் கடித்துக் கொண்டு களத்தில் இறங்குங்கள்” எனக் கூறியுள்ளார்.

Hariharasudhan R

Recent Posts

ஆஹா, இது செம கம்பேக்! சின்மயியை மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்த டி இமான்…

பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…

1 day ago

ராயப்பன் கேரக்டர் உண்மையிலேயே வாழ்ந்தவர்- யார் அந்த நபர்? சீக்ரெட்டை உடைத்த அட்லீ

டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…

1 day ago

நாச்சியப்பன் கடையில் பெயரை பொறித்து இனியும் மக்களை ஏமாற்ற முடியாது.. அண்ணாமலை சாடல்!

பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…

1 day ago

நல்ல வேளை இந்த பாட்டை படத்துல வைக்கலை, சுத்தமா செட் ஆகலை? “முத்தமழை” வீடியோ பாடலால் ரசிகர்கள் ஏமாற்றம்

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…

1 day ago

கழிவறையில் ரகசிய கேமரா… வீடியோ எடுத்து ஆசைக்கு இணங்க பெண் போலீசுக்கு மிரட்டல்..!!

கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…

1 day ago

இணையத்தில் டைட்டில் கசிந்ததால் படத்தின் பெயரையே மாற்றிய சூர்யா 45 இயக்குனர்? அடடா…

சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…

1 day ago

This website uses cookies.