Categories: தமிழகம்

’என்ன அண்ணாமலை.. உன்னையும் சேர்த்துதான்..’ நீ கூட களத்துக்கு போறதில்ல.. அன்புமணி பரபரப்பு பேச்சு!

கட்சியின் ஒன்றியச் செயலாளர்களே களத்திற்குச் செல்வதில்லை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சேலத்தில் நடந்த கூட்டத்தில் கூறியுள்ளார்.

சேலம்: சேலத்தில், பாமக மக்கள் சந்திப்புக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இருவரும் அருகருகே அமர்ந்திருந்தாலும், ஒருவரையொருவர் முகம் காட்டியதில்லை எனக் கூறினார்.

இதனையடுத்து, கூட்டத்தில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “இதே மாவட்டத்தில் (சேலம்) தனியாக நின்று இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறோம். இப்போது கூட்டணியில் இருந்தும் இரண்டு தொகுதிகளைத்தான் வென்றுள்ளோம். அப்படியென்றால் நாம் வளர்ந்திருக்கிறோமா?

நமக்கு பலம் இருக்கிறது, இளைஞர் சக்தி இருக்கிறது, வழிகாட்ட ராமதாஸ் இருக்கிறார். ஆனால், அன்றைக்கு இருந்த உழைப்பு நம்மிடம் இல்லை. அன்று எந்த எதிர்பார்ப்பும் இன்றி, களத்தில் இறங்கி வேலை செய்தோம். இன்று கிராமங்களுக்குப் போவதே கிடையாது.

தமிழ்நாட்டில் யாரைக் கேட்டாலும் பாமக சிறந்த கட்சி எனச் சொல்வார்கள். நல்ல கொள்கை, கோட்பாடு, செயல்திட்டங்கள், தொலைநோக்குப் பார்வை உள்ள கட்சி என்று சொல்வார்கள். ஆனால், இந்தச் செய்திகளை களத்தில் கொண்டு போய்ச் சேர்ப்பதில்லை. கட்சியின் ஒன்றியச் செயலாளர்களே களத்திற்குச் செல்வதில்லை.

நாடாளுமன்றத் தேர்தலில் எவ்வளவு பெரிய வருத்தம் தெரியுமா? சேலம் மக்களவைத் தொகுதியில் ஆறு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. அவற்றில் நான்கு தொகுதிகளில் நாம் எம்எல்ஏவாக இருந்திருக்கிறோம். ஆனால், நமக்கு கிடைத்தது சொற்ப வாக்குகள் தான். நம் வாக்கு, நம் உழைப்பு எங்கே போனது?

நாம் இழந்த வாக்குகளையெல்லாம் மீண்டும் வர வைக்க வேண்டும். சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் இருக்கின்றன. நம்மைப் போல யாராலும் உழைக்க முடியாது, ஆனால் ஏதோ ஒரு தொய்வு நம்மிடம் இருக்கிறது. மனதுக்குள் இருக்கும் வெறியை இன்னும் 10 மாதங்களில் நாம் பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க: இன்னும் ஒரு போஸ்டிங் போடுங்க.. உத்தரவிட்ட விஜய்.. நாளை முக்கிய அறிவிப்பு?

தனியாகப் போட்டியிட்டால் கூட சேலம் மாவட்டத்தில் உள்ள எட்டு தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். பாமகவுக்கு அதிக எம்எல்ஏக்களை கொடுத்துள்ள மாவட்டம் சேலம். எவ்வளவோ செய்திகளை மக்களிடம் சொல்லலாம்.

என்ன அண்ணாமலை அப்படியே பாக்குற. உன்னையும்தான் சேர்த்துச் சொல்றேன்.. உன் தொகுதியில் வாங்குனியே ஓட்டு, 52 ஆயிரம் வாக்குகள் வாங்கிய தொகுதி அது. இன்னும் 10 மாதங்கள் தான் இருக்கின்றன. வெறி வர வேண்டும். பல்லைக் கடித்துக் கொண்டு களத்தில் இறங்குங்கள்” எனக் கூறியுள்ளார்.

Hariharasudhan R

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.