தமிழகம்

‘திமுகவிற்கு நிபந்தனை இல்லா ஆதரவு’.. அன்புமணியின் திடீர் பேச்சு.. திமுகவின் பதில் இதுதான்!

வன்னியர் உள் ஒதுக்கீடு தொடர்பாக அன்புமணி ராமதாஸின் பேச்சுக்கு அமைச்சர் சிவசங்கர் பதிலளித்த நிலையில், ஜி.கே.மணி மீண்டும் கேள்வி எழுப்பி உள்ளார்.

விழுப்புரம்: வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கக் கோரி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து ஆயிரம் நாட்களைக் கடந்துவிட்ட நிலையிலும், திமுக அரசு அதன் மீது நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, நேற்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் பாமக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “திமுக வன்னியர்களுக்கு 15 சதவீத இட ஒதுக்கீடு அளித்தால், எந்த நிபந்தனையும் இல்லாமல்
திமுகவிற்கு ஆதரவு அள்ளிப்போம். 15 விழுக்காடு கையெழுத்து போடுங்கள், நிபந்தனை வேண்டாம், சீட்டுக் கீட்டு எதுவும் வேண்டாம்.

அப்படிச் செய்யவில்லை என்றால், வீடு வீடாகச் செல்வோம்; தெருத்தெருவாகச் செல்வோம். ஸ்டாலின் ஒரு வன்னியர் விரோதி என வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்வோம். மானம் உள்ள ஒரு வன்னியர் கூட, திமுகவிற்கு வாக்களிக்க மாட்டான். வன்னியர் சமுதாயத்தின் ஓட்டு மட்டும் வேண்டும், ஆனால் இந்த சமுதாயம் முன்னேறக்கூடாது.

கடைசி வரை இந்தச் சமுதாயம் குடிச்சு குடிச்சு நாசமாகவேப் போக வேண்டும். அடிமையாக இருக்க வேண்டுமா? இட ஒதுக்கீடு கொடுக்க மாட்டீர்களா? திமுகவில் எத்தனையோ தியாகங்கள் செய்து கட்சிக்காக சிறைக்குச் சென்றவர் துரைமுருகன். இன்று திமுகவிலேயே மூத்த அமைச்சராக இருக்கிறார் துரைமுருகன்.

திமுகவிற்காக எவ்வளவோ உழைத்த துரைமுருகனுக்கும் இன்னொரு துணை முதல்வர் பதவியாவது கொடுத்திருக்கலாமே? அவர் வன்னியர் சமுதாயத்தில் பிறந்ததால் துணை முதல்வர் பதவி மறுக்கப்பட்டுள்ளது” என ஆவேசமாகப் பேசினார். இந்தப் போராட்டத்தில் உதயநிதி பேனரும் கிழிக்கப்பட்டது.

இதையும் படிங்க: சிங்கை ராமச்சந்திரனுக்கு புதிய பதவி… எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!!

இந்த நிலையில், “பாமகவில் இன்று வரை பாடுபடும் ஜி.கே.மணியிடம் இருந்து தலைவர் பதவியைப் பறித்தது ஏன்? இட ஒதுக்கீட்டிற்கே முட்டுக்கட்டையாக இருக்கும் பாஜக கூட்டணியை விட்டு வெளியேறிவிட்டு, பாமக தலைவர் அன்புமணி பேசுவாரா? மக்கள்தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என்று மோடி அரசை கேட்பீர்களா?” என போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்துள்ள பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி, “பாஜக கூட்டணியில் இருந்து நாளையே நாங்கள் வெளியே வருகிறோம். வன்னியர்களுக்கு 15 சதவீத ஒதுக்கீட்டை அரசு நிறைவேற்றுமா? அன்புமணி கூறியதைப் போல திமுகவுக்கு நிபந்தனை இல்லாத ஆதரவு வழங்கத் தயார். அப்படிச் செய்தால் வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தில் வன்னியருக்கு 15 சதவீத இடஒதுக்கீடு வழங்கி சட்டம் நிறைவேற்றப்படுமா?” என கேள்வி எழுப்பி உள்ளார்.

Hariharasudhan R

Recent Posts

முதல் திருமணத்தை மறைத்து பல லட்ச ரூபாய் மோசடி!  “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” நடிகையின் கைவரிசை?

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர்  “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…

5 minutes ago

பார்த்தாலே தெரியுது, படம் ஃபிளாப்னு- பிரபாஸின் புது பட டீசரால் கடுப்பான ரசிகர்கள்…

பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…

2 hours ago

அதிமுக மூத்த தலைவருடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு… செல்லூர் ராஜு சொன்ன விளக்கம்!

மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…

2 hours ago

முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்க முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அழைப்பு.. டுவிஸ்ட் வைத்த பாஜக!

மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…

3 hours ago

வடசென்னை 2 டிராப்? வெளிப்படையாக போட்டுடைத்த வெற்றிமாறன்!

மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…

3 hours ago

ஜெகன்மூர்த்தி வீட்டுக்கு சென்ற பொற்கொடி ஆம்ஸ்டிராங்.. மனைவியை சந்தித்து ஆதரவு..!

காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…

3 hours ago

This website uses cookies.