தமிழகம்

வேலையை விட்ட நிதிஷ் குமார் ரெட்டியின் தந்தை.. ஆந்திர அரசு கொடுத்த அதிர்ச்சி!

சதம் கண்ட இளம் இந்திய வீரர் நிதிஷ் குமார் ரெட்டிக்கு ஆந்திர கிரிக்கெட் சங்கம் 25 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை அறிவித்துள்ளது.

மெல்போர்ன்: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும், பார்டர் கவாஸ்கர் கோப்பையின் 4வது போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் 221 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து நின்றது இந்திய அணி. அப்போதுதான் 8வது வீரராக நிதிஷ் குமார் ரெட்டி களமிறங்கினார்.

21 வயதான இந்த இளம் வீரர், இந்திய அணியின் இக்கட்டான நிலையில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 50 ரன்களைக் குவித்தார். இதனை, ‘புஷ்பா’ பட பாணியிலும் நிதிஷ் குமார் கொண்டாடினார். இதனையடுத்து, தனது முதல் டெஸ்ட் சதத்தையும் பதிவு செய்தார் நிதிஷ் குமார் ரெட்டி.

இதனையடுத்து, 4-வது நாள் ஆட்டத்தில் 114 ரன்கள் எடுத்திருந்தபோது நிதிஷ்குமார் ரெட்டி ஆட்டமிழந்தார். இதனையடுத்து, இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 369 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனிடையே, சதம் எடுக்க ஒரு ரன் மட்டுமே தேவை என்ற நிலையில், நிதிஷ் குமாரின் தந்தை முதாய்லா ரெட்டி, தனது கண்களை மூடி வேண்டிக்கொண்டிருந்த தருணம், அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

மேலும், சதம் அடித்த பிறகு, மைதானத்தில் இருந்த அவரது தந்தையிடம், ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் வர்ணனையில் இருந்த ஆடம் கில்கிறிஸ்ட் பேட்டி காண வந்தார். அப்போது பேசிய நிதிஷ் குமாரின் தந்தை, “எங்கள் குடும்பத்திற்கு இது சிறப்பு வாய்ந்த நாள். இந்த நாளை எங்கள் வாழ்நாளில் மறக்கவே முடியாது.

இதையும் படிங்க: வெடித்துச் சிதறிய போயிங் விமானம்.. 62 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை!

14-15 வயது முதலே நன்றாக அவன் ஆடி வந்தான். இப்போது சர்வதேச கிரிக்கெட்டிலும் சிறப்பாக ஆடுகின்றான். உண்மையிலேயே இந்த நாள் ஒரு சிறப்பான நாள் தான், சிறப்பான உணர்வைத் தந்த நாளும் தான்” என்றார். தொடர்ந்து, 99 ரன்களில் இருந்த போது உங்கள் உணர்வுகள் என்ன என்று கேட்டபோது, “ஒரே டென்ஷன் டென்ஷன் டென்ஷன்.. ஒரு விக்கெட் மட்டுமே இருந்தது, நல்ல வேளை சிராஜ் நின்றார்” என ஆனந்தக் கண்ணீருடன் கூறினார்.

இதனையடுத்து, முதாய்லா ரெட்டி தனது வேலையை விட்டதாக வெளியான பதிவு ஒன்றிற்கு, ‘இது உங்களுக்கானது அப்பா’ என நெகிழ்ச்சியுடன் நிதிஷ் குமார் ரெட்டி பதிலளித்துள்ளார். மேலும், சதம் பதித்த நிதிஷ்குமார் ரெட்டிக்கு 25 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையைவழங்குவதாக ஆந்திர கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

Hariharasudhan R

Recent Posts

தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?

யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…

7 hours ago

ஊழல் கூட்டணி எங்களை பற்றி பேசுவதை பார்த்தால் சிரிப்பு தான் வருது : இறங்கி அடிக்கும் நிர்மலா சீதாராமன்!

சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…

9 hours ago

லோகேஷ் கனகராஜ்ஜுக்கும் அந்த விபரீத ஆசை வந்திடுச்சா? விரைவில் எடுக்கப்போகும் புதிய அவதாரம்!

லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…

9 hours ago

திருத்தணி கோவிலில் குடும்பஸ்தன் பட பாணியில் திருமணம்… ரகளைக்கு நடுவே நடந்த கலாட்டா காதல் கல்யாணம்!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…

10 hours ago

சந்தோஷ் நாராயணனை அவமானப்படுத்திய நபர்! விழுந்து விழுந்து சிரித்த சூர்யா? இப்படியா பண்றது?

கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…

10 hours ago

முழு சந்திரமுகியாக மாறிவரும் சங்கி : பிரபல பத்திரிகையை விளாசிய தவெக ராஜ்மோகன்!

விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…

11 hours ago

This website uses cookies.