சற்றென்று மாறிய வானிலை… எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு? வேலூரில் விடுமுறை அறிவிப்பு!!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது அங்கங்கே ஆரம்பித்து பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதன் காரணமாக சற்று குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டுள்ளது.
விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர், நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. அதே போல வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் காற்றின் திசை மாறுபாடு காரணமாக கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதில், மேற்கு திசை மாறுபாட்டின் காரணமாக 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கோவை, நீலகிரி, நாமக்கல், தேனி, திண்டுக்கல், சேலம், திருச்சி, கள்ளக்குறிச்சி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்ட்டுள்ளது. சென்னையில் அடுத்த 48 மணிநேரத்திற்கு பல்வேரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இந்த மழை காரணமாக வேலூரில் 1ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரையில் உள்ள தொடக்க பள்ளி மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார். 6 முதல் 12ஆம் வகுப்பு பள்ளிகள், கல்லூரிகள் வழக்கம் போல செயல்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் சுமார் 50,000 க்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர், இதையும்…
புரட்சி இயக்குனர் “பரியேறும் பெருமாள்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் மாரி செல்வராஜ். தனது…
கீழடி தமிழர் தாய்மடி எனும் தலைப்பில் திமுக மாணவர் அணி சார்பாக மதுரை விரகனூர் சுற்றுச்சாலை அருகே மத்திய அரசைக்…
This website uses cookies.