தேவகோட்டை ராம் நகர் மளிகை கடையில் வாங்கிய பிரபல நிறுவனத்தின் சேமியா பாக்கெட்டில் உயிரிழந்த தவளை கிடந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சியடைந்தனர்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பண்ணாரி அம்மன் நகரை சேர்ந்தவர் பூமிநாதன். இவர் தீபாவளி உணவு தயாரிப்பதற்காக தனது வீட்டிற்க்கு அருகில் உள்ள மளிகை கடையில் பிரபல உணவு பொருள் தயாரிப்பு நிறுவனமான அணில் மார்க் கம்பெனி தயாரித்த சேமியா பாக்கெட் வாங்கி உள்ளார்.
இந்நிலையில், பாயாசம் செய்வதற்காக சேமியா பாக்கெட்டை பிரித்த போது,அந்த பாக்கெட்டுக்குள் இறந்த நீண்ட நாளான தவளை காய்ந்து போன நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக சம்பந்தப்பட்ட கடைக்காரரை தொடர்பு கொண்டு இது குறித்து கேட்டுள்ளார். “பிரபல கம்பெனி பேக்கிங் செய்து கொடுத்த சேமியாவை தான் வாங்கி விற்பனை செய்தேன். பிரபல கம்பெனி என்பதால் நம்பிக்கையுடன் வாங்கி விற்பனை செய்தது தவறுதான்,” என்று வருந்தியுள்ளார்.
எது எப்படி இருந்தாலும், சிறிய கம்பெனிகள் மட்டுமே பாதிக்கப்படும் நிலையில் பெரிய கம்பெனிகளின் தவறுகள் மறைக்கப்படுவதாகவும் புகார்கள் இருந்துள்ளது.
பொதுமக்களின் சுகாதாரம் காக்க உணவு பாதுகாப்புத் துறையினர் விழித்துக் கொண்டு குறைந்த அளவு பாதுகாப்பையாவது உறுதி செய்ய வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதனிடையே, “தொழிற்சாலையில் தவறு நடக்க வாய்ப்பில்லை” என வாடிக்கையாளரின் புகாருக்கு அணில் சேமியா விற்பனை மேலாளர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.