தமிழ் திரையுலகில் இசையமைப்பாளர்களாக படங்களில் கலக்கியதோடு, நடிப்பிலும் கலக்கி வருபவர்கள தான் விஜய் ஆண்டனி, ஜிவிபிரகாஷ். இருவரும் பல திரைப்படங்களில் ஹீரோக்களாக நடித்து வருகின்றனர். அதேபோல் இளம் இசையமைப்பாளரான அனிருத்தையும் ஹீரோவாக நடிக்க வைக்க இயக்குனர் ஒருவர் முயற்சி செய்துள்ளார.
அனிருத் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக திகழ்கிறார். ரஜினியின் தலைவர் 169 மற்றும் அஜித்தின் 62 ஆகிய படங்களுக்கு அனிருத் இசையமைக்க உள்ளார். இதுதவிர பல டாப் நடிகர்களின் படங்களுக்கும் அனிருத் தான் இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில் தான், இயக்குனர் விக்னேஷ் சிவன் அவரது படத்தில் ஹீரோவாக நடிக்க அனிருத்தை அனுகி இருக்கிறாராம். அதன்படி கடந்த 2015 ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் தான் ‘நானும் ரவுடி தான்’. இந்த படத்தில் தான் அனிருத்தை ஹீரோவாக நடிக்க விக்னேஷ் சிவன் கேட்டுள்ளாராம்.
இந்த படத்தின் கதை அனிருத்துக்கு மிகவும் பிடித்திருந்ததாம். ஆனால் ஹீரோவாக நடிக்க தயக்கம் இருந்ததாலும், அந்த சமயத்தில் விஜய்யின் கத்தி படத்தில் பிசியாக இருந்ததாலும் அனிருத் அந்த படத்தில் நடிக்க மறுத்து விட்டாராம். அதனையடுத்து பல ஹீரோக்களிடம் கதை சொல்லிய விக்னேஷ் சிவனுக்கு இறுதியாக நடிகர் விஜய் சேதுபதி தான் ஓகே சொன்னாராம். ஒரு வேலை நானும் ரவுடி தான் படத்தில் அனிருத் ஹீரோவாக நடித்திருந்தால் கற்பனை செய்து பாருங்கள். அப்படி ஒரு வேல அந்த சம்பவம் நடந்திருந்தால். விக்னேஷ் சிவனை, நயன்தாரா காதலித்திருக்கவே மாட்டார் என்றே நினைக்க தோன்றுகிறது.
பாகிஸ்தானுக்கு ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்துள்ளது. இதற்கு உலகமே இந்தியாவை பாராட்டி…
விஜய்க்கு ஒன்னும் தெரியாது தவெக தலைவராக பரிணமித்திருக்கும் விஜய் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளவுள்ளார். தனது…
சிவகாசியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் 71வது பிறந்தநாள் விழாவை கொண்டாடுவது குறித்த அதிமுக நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.…
கிரிக்கெட்டின் தல கிரிக்கெட் ரசிகர்களால் தல என அழைக்கப்படுபவர் தோனி. இவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக திகழ்ந்தவர்…
தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டம், கொண்டாபூர் மண்டலம் கரகுர்த்தி கிராமத்தை சேர்ந்த சுபாஷ் (42), தனது மகன் மரியன் (13),…
திண்டுக்கல் மாநகராட்சி காமராசர் பேருந்து நிலையத்தில் இருந்து திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள மலைப்பகுதிக்கு செல்லும் 9 புதிய புற நகர் பேருந்துகள்,…
This website uses cookies.