சென்னை அண்ணா பல்கலை வளாகத்தல் ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த மாணவியை ஞானசேகரன் என்பவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்தார்.
இந்த சம்பவம் தமிழ்நாட்டில் அதிர்வலையை ஏற்படுத்தியது. மாணவி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஞானசேகரனை கைது செய்தனர்.
விசாரணையில் அவர் திமுக நிர்வாகி என்பதும் தெரியவந்தது. இந்த சம்பவத்தில் இன்னொரு நபருக்கு ஞானசேகரன் போன் மூலம் பேசியதாகவும் கூறப்படுகிறது. அந்த நபர் யார் என்று இதுவரை தெரியவில்லை,
ஞானசேரகன் ஆளுங்கட்சி நிர்வாகி என்பதால் வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து பாலியல் வன்கொடுமை வாக்கை விசாரிக்க ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வுக்குழுவை அமைத்தது உயர்நீதிமன்றம்
இந்த குழு அளித்த குற்றப்பத்திரிகை கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவி உட்பட 29 பேர் சாட்சி அளித்தனர். இதையடுத்து அனைத்து வாதங்களும் முடிந்த நிலையில், தீர்ப்பு கடந்த வாரம் வழங்கப்பட்டது.
ஞானசேகரன் குற்றவா என மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி அறிவித்தார். இதையடுத்து இன்று தண்டனை விபரம் வழங்கப்பட்டது. அதில், 30 ஆண்டுகளுக்கு குறையான ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இந்த தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும், ரூ.90,000 அபராதம் விதித்தும் உத்தரவிட்டார்.
கலவையான விமர்சனம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலரும் நடித்த…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏழை எளிய மக்களை பாதிக்கும் வகையில் அத்தியாவசிய பொருட்கள் விலை ஏற்றத்தைக்…
தீ VS சின்மயி “தக் லைஃப்” திரைப்படத்தில் பாடகி தீயின் குரலில் “முத்த மழை” என்ற பாடல் இடம்பெற்றிருந்தது. ஆனால்…
மதிமுக பொது செயலாளர் வைகோ கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர் : மதிமுக ஜூன் 22…
திண்டுக்கல் மாவட்டம்,வேடசந்தூர் அருகே உள்ள கோடாங்கி சின்னான்பட்டியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் காளியம்மன் மற்றும் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.…
This website uses cookies.