தமிழகம்

அண்ணா பல்கலையில் பாலியல் வன்கொடுமை.. சிக்கியது யார்? உயர்கல்வித்துறை அமைச்சர் கூறுவது என்ன?

சிசிடிவி காட்சியின் அடிப்படையில் ஒருவரைப் பிடித்து விசாரித்து வருவதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாக அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து அமைச்சர் கோவி.செழியன் கூறியுள்ளார்.

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து வரும் மாணவரும், மாணவியும் நேற்று (டிச.24) பல்கலைக்கழக வளாகத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்து உள்ளனர். அப்போது, அங்கு வந்த 2 பேர், திடீரென மாணவரைத் தாக்கியுள்ளனர்.

பின்னர், மாணவனை அடித்து துரத்திவிட்டு, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து உள்ளனர். ஆனா;ல், இது குறித்து அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் எந்தப் புகாரும் இதுவரை அளிக்கப்படவில்லை. இதனிடையே, பாதிக்கப்பட்ட மாணவி கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.

இதன் பேரில், சம்பவத்தில் ஈடுபட்ட இருவரும் அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்களா அல்லது வெளி ஆட்களா என்பதை அறிய, பல்கலைக்கழக சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். அதேநேரம், மாணவியின் புகாரின் அடிப்படையில், கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மாணவியிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, இதுதொடர்பாக உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “இந்த விவகாரத்தில் விரைவாக நடவடிக்கை எடுக்க விசாரணைக் குழு அமைக்கப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்ட மாணவி நடைபயிற்சி செய்து கொண்டிருந்தபோது வன்கொடுமை சம்பவம் நடந்ததாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

இதையும் படிங்க: கேல் ரத்னா விருதுக்கு தகுதி இல்லையா? மௌனம் கலைத்த மனு பாக்கர்!

இந்த விவகாரத்தில் சிசிடிவி காட்சியின் அடிப்படையில் ஒருவரைப் பிடித்து விசாரிக்கப்பட்டு வருவதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டது” எனத் தெரிவித்து உள்ளார். ஒரு உயரிய பல்கலைக்கழகத்தில் இவ்வாறான சம்பவம் அரங்கேறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Hariharasudhan R

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.