தமிழகம்

யார் அந்த SIR? மாணவியின் பகீர் வாக்குமூலம்.. அதிரவைக்கும் FIR!

அண்ணா பல்கலை மாணவி அளித்த வாக்குமூலத்தில் மூன்றாவதாக சார் என ஞானசேகரன் கூறியது யார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

சென்னை: டிசம்பர் 23, இரவு 07.45 மணி அளவில், அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் ஒரு கட்டடம் அருகே நானும், எனது ஆண் நண்பரும் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்துள்ளனர். அப்போது, மறைந்திருந்த நபர் ஒருவர் திடீரென எங்கள் கண்முன்னே வந்தார்.

’நீங்கள் இருவரும் ஒன்றாக பேசிக் கொண்டிருப்பதை நான் வீடியோவாக எடுத்துவிட்டேன். உங்களது டீனுக்கு அனுப்பவா?’ எனக் கேட்டுக் கொண்டே எனது செல்போனை வாங்கி, என்னுடைய அப்பாவின் செல்போன் எண்ணைப் பெற்றுக் கொண்டார்.

நாங்கள் எவ்வளவு கெஞ்சியும் அதற்கு அவர் செவிசாய்க்கவில்லை. பின்னர், எனது ஆண் நண்பரை அழைத்துச் சென்று, மிரட்டி அவரை அனுப்பிவிட்டார். பின்னர், என்னை அடுத்த இரண்டு கட்டடங்களுக்குப் பின்னால், இருள் சூழ்ந்த இடத்திற்கு அழைத்துச் சென்ற அந்நபர், எனக்கு மூன்று வாய்ப்புகளை வழங்குவதாக கூறினார்.

முதலில், இதனை கல்லூரி டீனுக்கு அனுப்பி விடுவேன், இரண்டாவது, நான் சொல்வதை நீ கேட்க வேண்டும், மூன்றாவது, அந்த சார் சொல்வதை நீ கேட்க வேண்டும் எனக் கூறினார். இதில் சார் என யாரைச் சொன்னார் என எனக்கு தெரியவில்லை. பின்னர், நான் மீண்டும் கெஞ்சினேன்.

இருப்பினும், அவர் எதையும் கேட்கவில்லை. பின்பு சுமார் 8.30 மணி வரை என்னை பாலியல் வன்கொடுமை துன்புறுத்தல் செய்தார். இதனிடையே, அவருக்கு ஒரு நபர் கால் செய்தார். அவரிடம், இப்போது பெண்ணை மிரட்டிக் கொண்டிருக்கிறேன் என கூறினார்.

இதுதான், அண்ணா பல்கலைக்கழகத்தில் பிரியாணி கடை நடத்தி வந்த ஞானசேகரனால் பாதிக்கப்பட்ட மாணவி அளித்த வாக்குமூலமாக முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டவை. இதன் அடிப்படையில் பார்த்தால், சம்பவ இடத்தில் ஞானசேகரன் மட்டுமே இருந்தாலும், செல்போனில் ஞானசேகரனை இயக்கியது யார், மூன்றாவது வாய்ப்பில் கூறிய அந்த சார் யார்? என்பது நம் முன்னே நிற்கும் கேள்விகள்.

இவ்வாறு முதல் தகவல் அறிக்கை வெளியாகி பரபரப்பாக்கிய நிலையில், இந்த வழக்கில் கைதாகி உள்ள ஞானசேகரன், திமுகவின், சைதை கிழக்கு பகுதி மாணவர் அணி துணை அமைப்பாளர் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்து உள்ளார்.

இதையும் படிங்க: ரஜினியை சந்தித்த சாம்பியன் குகேஷ்.. வீட்டுக்கே அழைத்து சர்ப்ரைஸ்..!!!

மேலும், இது தொடர்பாக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன் ஆகியோர் உடன் ஞானசேகரன் இருக்கும் புகைப்படங்களையும் அவர் வெளியிட்டு இருப்பது மேலும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இதனிடையே, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் ஞானசேகரன்.

அப்போது, ஜனவரி 8 வரை நீதிமன்றக் காவல் அளித்த நிலையில், ஞானசேகரன் மாவுக்கட்டுடன் இருப்பதால், சிகிச்சைக்குப் பிறகு புழல் சிறையில் அடைக்கப்படுவார் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Hariharasudhan R

Recent Posts

கடனை திருப்பி தராததால் மரத்தில் பெண்ணை கட்டி வைத்து தாக்கிய விவகாரம்.. போலீசார் செக்..!!

சித்தூர் மாவட்டம், குப்பம் நகராட்சி எல்லையில் உள்ள நாராயணபுரத்தில், கடனை வசூலிக்க ஒரு பெண்ணை மரத்தில் கட்டி, தாக்கிய மனிதாபிமானமற்ற…

2 hours ago

படத்தை தடை செய்தது நியாயமா? தக் லைஃப்க்கு ஆதரவாக வந்த உச்சநீதிமன்ற உத்தரவு!

மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” என…

2 hours ago

நெல்சன் சார், நீங்க என்ன இங்க? இணையத்தில் லீக் ஆன வெற்றிமாறன்- சிம்பு படத்தின் ஷுட்டிங் ஸ்பாட்!

வடசென்னை 2? கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை…

3 hours ago

சமந்தாவிடம் வம்பிழுத்த நபர்கள்.. கோபத்தோடு பேசிய சமந்தாவின் ஷாக் வீடியோ!

நடிகை சமந்தாவிடம் யாரோ வம்பிழுத்து, அவர் கோபத்தோடு பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜிம்மில்…

3 hours ago

என் மீது வழக்கு போட்ட சிபிஐ அமைப்பை தண்ணி குடிக்க வைத்தவன் நான்… ஆ.ராசா பெருமிதம்!

புதுக்கோட்டை கலைஞர் தமிழ்ச் சங்கத்தின் 25வது ஆண்டு விழா நடைபெற்றது. இதையும் படியுங்க: 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல்…

3 hours ago

அந்த நபர் அப்படி பண்ணது… அதிர்ச்சியாகிட்டேன்- ஜொனிடா காந்திக்கு நடந்த பாலியல் சீண்டல்? அடக்கொடுமையே

மனம் கவர்ந்த பாடகி பாலிவுட்டில் “சென்னை எக்ஸ்பிரஸ்” திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் மூலம் சினிமாவிற்குள் பின்னணி பாடகியாக அடியெடுத்து…

4 hours ago

This website uses cookies.