2022 கோவை குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்ததற்கு 10 மாதங்களுக்கு முன்பு காட்டில் வைத்து 8 பேர் சதித்திட்டம் தீட்டியதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
கோயம்புத்தூர்: கோவையில், கடந்த 1998ஆம் ஆண்டு நடைபெற்ற கார் குண்டு வெடிப்புச் சம்பவத்தில், முதல் குற்றவாளியாக தடை செய்யப்பட்ட அல் உம்மா இயக்கத்தின் தலைவரான எஸ்ஏ பாஷா கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக, கடந்த டிசம்பர் 16ஆம் தேதி உயிரிழந்தார்.
பின்னர், எஸ்ஏ பாஷாவின் இறுதி ஊர்வலத்துக்கு போலீசார் அனுமதி அளித்த தமிழக அரசைக் கண்டித்து பாஜக சார்பில், கருப்பு தின பேரணி நேற்று மாலை, கோவை காந்திபுரம் பகுதியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், விஸ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து, ஆர்ப்பாட்ட மேடையில் பேசிய அண்ணாமலை, “2022ஆம் ஆண்டு மனித வெடி குண்டாக மாறி கோவையைத் தாக்க திட்டமிட்டனர். மக்கள் அதிகம் கூடும் ஒரு துணிக்கடையில் காரை நிறுத்தி சேதம் ஏற்படுத்தவும் திட்டமிட்டனர். கோயிலைத் தாண்டும்போது வெடித்து முபின் இறந்துவிட்டார்.
ஆனால், இதற்காக, 2022ஆம் ஆண்டு பிப்ரவரியில் உமர் பரூக் என்பவர் தலைமையில், சத்தியமங்கலம் காட்டில் சதித் திட்டத்தை தீட்டினர். அதன்படி, அவர்களின் இரண்டாவது டார்கெட் போலீஸ் கமிஷனர் ஆபீஸ். 7 நாள் 7 இடங்களை தாக்குவதற்கு அவர்கள் திட்டமிட்டனர்.
ஆனால், இது தீவிரவாத தாக்குதல் இல்லை என தமிழக போலீஸ் கூறுகிறது. நானும் அதே காக்கியைப் போட்டவன், எனவே காவல்துறை இனியாவது நேர்மையுடன் நடந்து கொள்ள வேண்டும். 1998 கோவை குண்டு வெடிப்புக்காக பாஷா மைசூர் சென்று வெடிகுண்டு வாங்கினார்.
50 பேர் இறந்து, 250க்கும் மேற்பட்டோர் இதில் காயம் அடைந்தனர். ஆனால், அந்த பாஷாவை ‘அப்பா’ என்று சீமான் கூறுகிறார். உயிரிழந்த யாருக்கும் அப்பா இல்லையா? ஓட்டுப் பிச்சை எப்படி எடுக்க வேண்டும் என உங்களிடம் தான் கற்றுக் கொள்ள வேண்டும்.
திருமாவளவன் பாஷாவை, ‘தியாகி, வீரவணக்கம்’ என்ற வார்த்தைகளால் சொல்கிறார். இதைவிட மோசமாக ஓட்டு பிச்சையை யாராலும் எடுக்க முடியாது. இதே பாஷா 2003ஆம் ஆண்டு கோவை நீதிமன்றத்தில், ‘மோடி கோவை வந்தால் கொன்றுவிடுவேன்’ எனக் கூறியதை மறக்கக் கூடாது.
இதையும் படிங்க: தீர்த்தம் குடித்த சாமியார் உள்பட 6 பேர் மருத்துவமனையில் அனுமதி.. திகிலூட்டும் பின்னணி!
கோவைக்கு என்ஐஏ அலுவலகம் அமைப்பதற்கு மத்திய அரசு பரிசீலனையில் ஈடுபட்டு உள்ளனர். போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பாஜகவினர் மீது ஒடுக்குமுறை செலுத்துகின்றனர்” எனக் கூறினார். குண்டுவெடிப்பு தொடர்பாக அண்ணாமலை பேசிய இப்பேச்சு தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், தடையை மீறி பேரணி செல்ல முயன்றதாக அண்ணாமலை, வானதி சீனிவாசன் உள்பட 500க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து, அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். தொடர்ந்து அவர்கள், இரவு 11 மணியளவில் விடுவிக்கப்பட்டனர்.
பல வருடக் கனவு கடந்த 2016 ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க புதிய கட்டிடத்தின் பணிகள் தொடங்கப்பட்டது. தென்னிந்திய…
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
This website uses cookies.