அரிசி மூட்டையை சுமந்து சென்ற அண்ணாமலை : வைரலாகும் வீடியோ…நெட்டிசன்கள் கேள்வி.. பாஜக பதிலடி!!
அண்ணாமலையின் ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.. பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக, பாஜக சார்பில் அலுவலகம் ஒன்றில் நிவாரண பொருட்கள் குவிக்க வைக்கப்பட்டுள்ளன.
பொதுமக்களுக்கு விநியோகிப்பதற்காக, மூட்டை மூட்டையாக அத்தியாவசிய இங்கு இறக்கி வைக்கப்பட்டிருக்கின்றன.. நேரடியாக இதை பார்வையிட்ட அண்ணாமலை, அங்குள்ள பொருட்களையும் ஒழுங்குப்படுத்தினார்.
அப்போது, ஒரு அரிசி மூட்டையை அசால்ட்டாக தூக்கி தன்னுடைய தோளில் வைத்து கொண்டார்.. அந்த அலுவலகத்தில் இன்னொரு பகுதியில் அந்த அரிசி மூட்டையை கொண்டு போய் வைத்தார்.. அங்கிருந்த பாஜக நிர்வாகிகள் இதை பார்த்து மிரண்டுபோய்விட்டார்கள்.
போலீஸ் அதிகாரியாக இருந்தவர் அண்ணாமலை.. அதனால், எப்போதுமே உடற்பயிற்சிகளில் அதிக கவனம் செலுத்துவார்.. ஒருமுறை இவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று வெளியாகியிருந்தது..
வேர்க்க விறுக்க அந்த வீடியோவில், பயிற்சிகளை செய்து கொண்டே, எல்லாருமே காலையில் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.. உடற்பயிற்சிக்காக, 2 மணி நேரம் நம்ம கன்ட்ரோலில் எடுத்துக் கொண்டால், அன்றைய நாள்முழுவதும் மிச்ச 8 மணி நேரமும் நம்முடைய கன்ட்ரோலில் அந்த நாள் இருக்கும்.. என்று அறிவுறுத்தியிருந்தது, பலரது கவனத்தையும் ஈர்த்திருந்தது.
தொடர்ந்து உடற்பயிற்சி மேற்கொள்வதாலோ என்னவோ, அசால்ட்டாகவே இந்த அரிசி மூட்டையை தூக்கி முதுகில் வைத்துக் கொண்டார் அண்ணாமலை.. இந்த வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. எப்படியும் அந்த அரிசி மூட்டை 10 கிலோ இருக்கும் என்கிறார்கள்.. நோ சான்ஸ், 5 கிலோ மூட்டையாக இருக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.
ஒத்த கையாலேயே, சாதாரணமாகவே மூட்டையை தூக்கறாரே தலைவர்” என்று பலரும் வீடியோவில் கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள். புரட்சி தளபதி, உழைப்பாளிகளின் அண்ணன் என்று பாஜகவினர் பாராட்டி வருகிறார்கள்..
ஆகமொத்தம், அண்ணாமலை எந்த காரியத்தை செய்தாலும், அது வைரலாகிவிடுவதுபோல, இந்த அரிசி மூட்டையும் இணையத்தில் ரவுண்டு கட்டி வருகிறது..
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.