தமிழகம்

பின்தொடர்ந்த உருவம்.. கூச்சலிட்ட காவலர்.. அண்ணாமலை கடும் விமர்சனம்!

சென்னை, பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் பெண் காவலரை பாலியல் துன்புறுத்தல் செய்ய முயன்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை: சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், நுண்ணறிவுப் பிரிவின் சமூக வலைத்தளங்கள் கண்காணிப்பாளராக 25 வயது பெண் காவலர் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், இவர் நேற்று இரவு 11.30 மணியளவில், பணி முடிந்து வீடு திரும்புவதற்காக, சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து மின்சார ரயிலில் ஏறியுள்ளார்.

தொடர்ந்து, பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் அவர் இறங்கியுள்ளார். இதனையடுத்து, நடைமேடையில் நடந்து சென்று கொண்டிருந்த அவரை திடீரென ஒரு நபர் கீழே தள்ளி விட்டு, அவர் அணிந்திருந்த ஒன்றை சவரன் தங்கச் செயினை பறித்துள்ளார். மேலும், அவரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார்.

ஆனால், அப்போது பெண் காவலர் கத்தி கூச்சலிட்டதால், ரயில் நிலையத்தில் இருந்த சக பயணிகள் ஓடிவந்து போதை நபரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர், இது தொடர்பாக ரயில்வே போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். இதன்படி, சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார், இது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில், செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர் சிட்லபாக்கத்தைச் சேர்ந்த சத்யபாலு (40) என்பது தெரிய வந்தது. மேலும், இவர் இந்த குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டபோது போதையில் இருந்ததும் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, அந்த நபரைக் கைது செய்த மாம்பலம் ரயில்வே போலீசார், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், “சென்னை பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில், பெண் காவலர் ஒருவர் பாலியல் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகம் பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத மாநிலமாக மாறிவிட்டது. அரசின் மீதோ, காவல்துறையின் மீதோ சமூகவிரோதிகளுக்கு எந்த பயமும் இல்லை. ஒட்டு மொத்த அரசு இயந்திரமே செயலிழந்து கிடக்கிறது. சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டிய காவல்துறையின் கைகள் கட்டப்பட்டு இருக்கின்றன. முதலமைச்சர் வெற்று விளம்பரங்களில் லயித்துக் கிடக்கிறார்.

இதையும் படிங்க: வேட்டைக்காரன் பாடலை வைத்து விஜயை மடக்கிய எச்.ராஜா.. மகனையும் விட்டுவைக்கவில்லை!

தமிழகத்தில் தினம் ஒரு பாலியல் குற்றச் செய்தி வெளிவருகிறது. அரசுத் தரப்பில் இருந்தும், காவல்துறை தரப்பில் இருந்தும் எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எந்தப் பகுதியிலுமே பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பது, ஒவ்வொரு குடும்பத்தையும் கடும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

திமுக அரசும், காவல்துறையும் செயல்படாமல் இருப்பதைத் தொடர்ந்தால், பொதுமக்களே தங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய நிலை ஏற்படும். இது சமூகத்தை எங்கு கொண்டு செல்லும் என்பதை உணர்ந்திருக்கிறாரா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்?

Hariharasudhan R

Recent Posts

ஆஹா, இது செம கம்பேக்! சின்மயியை மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்த டி இமான்…

பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…

20 hours ago

ராயப்பன் கேரக்டர் உண்மையிலேயே வாழ்ந்தவர்- யார் அந்த நபர்? சீக்ரெட்டை உடைத்த அட்லீ

டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…

21 hours ago

நாச்சியப்பன் கடையில் பெயரை பொறித்து இனியும் மக்களை ஏமாற்ற முடியாது.. அண்ணாமலை சாடல்!

பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…

21 hours ago

நல்ல வேளை இந்த பாட்டை படத்துல வைக்கலை, சுத்தமா செட் ஆகலை? “முத்தமழை” வீடியோ பாடலால் ரசிகர்கள் ஏமாற்றம்

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…

22 hours ago

கழிவறையில் ரகசிய கேமரா… வீடியோ எடுத்து ஆசைக்கு இணங்க பெண் போலீசுக்கு மிரட்டல்..!!

கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…

22 hours ago

இணையத்தில் டைட்டில் கசிந்ததால் படத்தின் பெயரையே மாற்றிய சூர்யா 45 இயக்குனர்? அடடா…

சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…

23 hours ago

This website uses cookies.