தமிழகம்

’சூரியன உதயநிதி பார்த்ததே இல்ல’.. ’தற்குறிகள்’.. அண்ணாமலை கடும் விமர்சனம்!

திமுககாரன் நடத்தும் பள்ளியில் மூன்று மொழி. ஆனால், நடுத்தர மக்கள் இரு மொழிகளைத்தான் படிக்கணுமாம் என அண்ணாமலை கூறியுள்ளார்.

கரூர்: கரூரில், 2025 மத்திய பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அண்ணாமலை, “அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. எப்போதும் இல்லாத அளவு இம்முறை மக்கள் தெளிவாக இருக்கின்றனர். தீய சக்தி திமுகவை வேரோடு அகற்ற வேண்டும் என்ற முடிவில் உள்ளனர்.

திமுகவின் ஆட்சி எப்படி இருக்கிறது என்றால், ஒரு பானை பனைமரத்துக் கள்ளைக் குடித்த குரங்கு தட்டு தடுமாறிக்கிட்டு இருக்கிறது. அப்போது, ஒரு தேள் வந்து கடிக்கிறது. கள்ளைக் குடித்த குரங்கை தேள் கடித்தால், அந்தக் குரங்கு எப்படி நடந்து கொள்ளுமோ, அப்படித்தான் திமுக ஆட்சி நிலைதடுமாறி இருக்கிறது.

திமுகவின் உதயநிதி, அன்பில் மகேஷ் ஆகிய தற்குறிகளைப் போன்று, அவர்கள் பாணியில் பேசப் போகிறேன். நீ (உதயநிதி) சூரியனை 11.30 மணிக்கு நடு உச்சியில் பார்க்கிறவன். நாங்கள், அதிகாலை 3 மணிக்கு பிரம்ம காலத்தில் எழுந்து குளித்து, 5 மணிக்கு கோப்புகளை எடுத்து, பார்க்கக் கூடியவர்கள்.

Get Out Modi, அதாவது வெளிய போடா மோடி என உதயநிதி ஸ்டாலின் கூறுவாராம். எங்கே, தைரியமான ஆளாக இருந்தால் சொல்லு பார்ப்போம். ஒரு உலகத் தலைவரை மதிக்கத் தெரியாத நபராக உதயநிதி இருக்கிறார். இதுவரையில் எந்த மேடையிலும் நான் அப்படி பேசியதில்லை.

இதையும் படிங்க: ஜிவி பிரகாஷ் உடன் கள்ளக்காதலா? சைந்தவிக்கு ஸ்கெட்ச்? பிரபல நடிகை பகீர்!

2026ஆம் ஆண்டில் திமுக ஆட்சிக்கு வந்தால், பஞ்சம் பிழைப்பதற்காக அனைவரும் மாநிலத்தை விட்டு வெளியேச் செல்ல வேண்டியதுதான். மோடி இந்தியை எங்கே திணிக்கிறார்? யாராவது சொல்லுங்கள். தமிழகத்திற்கு அவர் வந்தாலே, ஆங்கிலத்தில்தான் பேசுகிறார். உங்களுடைய குழந்தை நன்றாக இருக்க வேண்டும் எனில், மூன்று மொழிகளைப் படிக்க வையுங்கள் என்பதைத் தான் சொல்கிறார்.

ஆனால், பொய்யைச் சொல்லி INDIA கூட்டணி என்ற போர்வையில் உலக மகா அயோக்கியன் எல்லாம் ஒரே மேடையில் உள்ளனர். அமைச்சர் அன்பில் மகேஷின் மகன் பிரெஞ்ச் மொழி படிக்கிறார். திமுககாரன் நடத்தும் பள்ளியில் மூன்று மொழி. ஆனால், நடுத்தர மக்கள் இரு மொழிகளைத்தான் படிக்கணுமாம். நடிகர் விஜய் சொந்தமாக நடத்தி வரும் விஜய் வித்யாஸ்ரம் பள்ளியில் இந்தி இருக்கிறது” எனக் கூறினார்.

Hariharasudhan R

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.