Categories: தமிழகம்

வரலாற்று பிழை செய்துள்ளார் அண்ணாமலை.. அவரு வந்த வழி அப்படி : செல்வப்பெருந்தகை விமர்சனம்!

திண்டுக்கல், கரூர் மாவட்டத்தில் காங்கிரஸ் செயல்வீரர் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை மதுரை விமான நிலையம் வந்தார் அப்போது செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்.

மின் கட்டண உயர்வு குறித்த கேள்விக்கு, உதய் மின் திட்டத்தில் அதிமுகவின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர் இருக்கும் வரை உதய் மின் திட்டத்தில் கையொப்பமிடவில்லை., அவர் காலமான பிறகு உதய் மின் திட்டத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

இந்தத் திட்டத்தில் கையொப்பமிட்டதால் அதிகாரம் அனைத்தும் மத்திய அரசிடம் சென்று விட்டனர். இதனால் கடன் வாங்க முடியாது., தற்போது ஒன்றிய அரசின் உத்தரவு மற்றும் அழுத்தத்தின் பெயரில் இந்த மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

இருந்தபோதிலும் காங்கிரஸ் சார்பாக முதலமைச்சர் மறு பரிசீலனை செய்ய வேண்டும் திரும்ப பெற வேண்டும் என்று தொடர்ந்து கேட்டுக் கொண்டு வருகிறோம்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தற்போது குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் ஆனால் திருநெல்வேலியில் காங்கிரஸ் நிர்வாகி கொலையகல் குற்றவாளி கைது செய்யப்படவில்லை குறித்த கேள்விக்கு.

தமிழ்நாடு காவல்துறையின் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது கண்டுபிடிக்க முடியாத வழக்குகளை கண்டுபிடித்தவர்கள். அதே நேரத்தில் புலன் விசாரணையில் நாம் தலையிடக்கூடாது என்ன நடக்கிறது என்பதை எங்களிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். சிபிசிஐடிக்கு மாற்றியுள்ளார்கள் கூடிய விரைவில் உண்மை வெளிவரும்..

தமிழக பாதுகாப்பு குறித்து அமித்ஷாவிடம் ஆளுநர் சந்தித்து பேசியது குறித்த கேள்விக்கு, முதலில் ஆளுநர் உள்துறை அமைச்சரை சந்தித்து குஜராத்தில் இருந்து போதைப்பொருள் வருவதை தடுக்க வேண்டும் தமிழ்நாட்டிற்கு குஜராத்தில் இருந்து தான் போதை பொருள் வருகிறது. போதைப் பொருளை தடுத்தாலே எல்லா குற்றங்களும் குறைந்துவிடும்..

கான்ல, முத்ரா என்ற அதானி துறைமுகங்களில் இருந்து சென்னைக்குள் தமிழ்நாட்டிற்கு வருவதாக செய்தி., முதலமைச்சர் பல இடங்களில் இதை குறிப்பிட்டுள்ளார் இதை கட்டுப்படுத்த வேண்டும்.

சசிகலா சுற்றுப்பயணம் குறித்த கேள்விக்கு, அது அவர்களுக்கு கட்சி பிரச்சன அவர்கள் ஒன்றிணைவதும், ஒன்று இணையாமல் இருப்பதும் அதில் நமது கருத்து சொல்வதற்கு முடியாது.

தலித் மக்கள் கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது என மத்திய இணை அமைச்சர் கூறியது குறித்த கேள்விக்கு, இந்தியாவில் 10 ஆண்டுகள் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது தலித்துகள் சிறுபான்மை மக்கள் தாக்கப்படுகிறார்கள். ஆயுதங்களால் மட்டுமல்ல சொற்களாலும் தாக்கப்படுகிறார்கள் பாஜக ஆட்சி வந்த பிறகுதான் இது.

ஓய்வு பெற்ற நீதி அரசரை கூட இன்று அண்ணாமலை விமர்சித்துள்ளார் இது வரலாற்று பிழை அவர்கள் வந்த வழி எப்படியோ அப்படிதான் பேசுகிறார்கள்.

பாஜக வினர் தோழமைக் கட்சிகளையும் எதிர்கட்சிகளையும் கூட விடுவதில்லை, ஆட்சியாளர்களையும் விடுவதில்லை. இந்த வெறுப்பு அரசியலை தமிழ்நாடு மக்கள் என்றைக்கும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

காவிரி பிரச்சனையில் திமுக அரசு நாடகம் ஆடுகிறது என அன்புமணி ராமதாஸ் கூறியது குறித்த கேள்விக்கு. காவிரி பிரச்சனையில் ஏற்கனவே 2007 ஆம் ஆண்டு 2018 ஆம் ஆண்டு காவிரி மேலாண்மை வாரியம், உச்சநீதிமன்றம் தீர்ப்பு உள்ளது இந்த தீர்ப்பின் அடிப்படையில் நமது கிடைக்க வேண்டிய உரிமையை காவிரி தண்ணீரை கொடுக்க வேண்டியது கர்நாடகா அரசு கடமை. அவர்கள் மறுக்கிறார் என்றால் இதனை ஒன்றிய அரசு பெற்றுத் தர வேண்டும் இதில் பிரதமர் தலையிட்டு தான் பெற்று தர வேண்டும் அது மோடியின் கடமை என்றார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

வெறித்தனமான அப்டேட்! விஜய் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி?

விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…

6 minutes ago

ஏதாவது ஒரு ஆக்ஷன் எடுப்பாங்க… மா விவசாயி போராட்டம் குறித்து அமைச்சரின் அலட்சிய பதில்!

வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…

32 minutes ago

கூலி படத்தின் பிசினஸை அசால்டாக தட்டிவிட்டு ஓவர்டேக் செய்த ஜனநாயகன்? செம டிவிஸ்ட்டா இருக்கே!

கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…

45 minutes ago

அதிமுகவை சீண்டுபவர்கள் யாராக இருந்தாலும் தூக்கி எறியப்படுவார்கள் : விஜயபாஸ்கர் ஆவேசம்!

திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…

2 hours ago

காதல் திருமண விவகாரத்தில் திருப்பம்… எம்எல்ஏ ஜெகன்மூர்த்தியின் ஆதரவாளர் ‘ஸ்வீட்’ குமார் தலைமறைவு!

திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காட்டை அடுத்த களாம்பாக்கத்தைச் சேர்ந்த வாலிபர் தனுஷ் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விஜயஸ்ரீ ஆகியோர் சமூக வலைதளம்…

2 hours ago

பிச்சைக்காரங்களுக்கு குபேரா பட டிக்கெட் இலவசம்? கவனத்தை ஈர்த்த டிவிட்டர் பதிவு? புதுசா இருக்கே!

பிச்சைக்காரராக தனுஷ் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் இன்று வெளியாகியுள்ள “குபேரா”…

2 hours ago

This website uses cookies.