Categories: தமிழகம்

கர்நாடகாவுக்கே திரும்பி ஓடப் போகிறார் அண்ணாமலை : அண்ணா, பெரியார் போட்ட பிச்சையால்தான் அவர் ஐபிஎஸ்.. ஆர்எஸ் பாரதி தாக்கு!!

கர்நாடகாவுக்கே திரும்பி ஓடப் போகிறார் அண்ணாமலை : அண்ணா, பெரியார் போட்ட பிச்சையால்தான் அவர் ஐபிஎஸ்.. ஆர்எஸ் பாரதி தாக்கு!!

செய்தியாளர்களை சந்தித்த ஆர்.எஸ்.பாரதி, அண்ணாமலைக்கு அரசியலே தெரியவில்லை. ஒரு பழமொழி கிராமத்தில் சொல்வார்கள். ‘கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை.’ என்று. அதுபோல அண்ணாவுடைய பெருமை அண்ணாமலைக்கு தெரிவதற்கு நியாயமில்லை. அவர் கொஞ்சம் மரியாதையாக பேசுவது இனி நல்லது.
காரணம் திமுகவும் தமிழ்நாடு மக்களும் அண்ணாவை பற்றியும் பெரியாரை பற்றியும் எவன் பேசினாலும் அதை தாங்கிக் கொள்ளவோ, அனுமதிக்கவோ தயாராக இல்லை. இதை அவர் புரிந்துகொள்ள வேண்டும். இன்று பேசி இருக்கும்போதுகூட அண்ணாதுரை என்று அவர் சொல்கிறார். தமிழ்நாட்டில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக, அண்ணா மறைந்த நாள் முதல் அண்ணா என்றுதான் அவரை எல்லோரும் அழைக்கிறார்கள்.
அவரைவிட வயதில் மூத்தவர்கள் கூட அண்ணா என்றுதான் அழைக்கிறார்கள். ஆனால், நேற்று பிறந்த அண்ணாமலை, நேற்று அரசியலுக்கு வந்த இந்த அண்ணாமலை அண்ணாதுரை என்று ஆணவமாக அழைக்கிறார். அழிவு ரொம்ப நாளில் இல்லை. நெருங்கிக்கொண்டு இருக்கிறது.

அண்ணாவை பற்றி யார் இழிவாக பேசினாலும் அவர்களுக்கு.. தவறான புள்ளி விபரங்களை எல்லாம் அண்ணா பற்றி சொல்கிறார். 1956 ல் அண்ணா பேசியதாக சொல்கிறார். அண்ணாமலைக்கு ஒன்றை தெரிவித்துக்கொள்கிறேன்.

1949 லேயே திராவிட முன்னேற்றக் கழகத்தை தொடங்கி தனிப் பெரும் தலைவராக தமிழ்நாட்டில் பவனி வந்தவர். 1949 லேயே கட்சி தொடங்கியவர். அவரை பார்த்து இப்படி கேவலமாக பேசிக்கொண்டு இருக்கிறார். அண்ணா மட்டும் பிறக்காமல் இருந்திருந்தால் அண்ணாமலை ஆடுதான் மேய்த்துக்கொண்டு இருக்க வேண்டும். ஆடு மேய்க்கிற அண்ணாமலை ஐபிஎஸ் ஆனது அண்ணா போட்ட பிச்சை. பெரியார் போட்ட பிச்சை என்பதை நான் இன்னும் ஒரு முறை அழுத்தம் திருத்தமாக தெரிவித்துக்கொள்கிறேன்.

இல்லை என்று சொன்னால் அண்ணாமலையின் நிலைமை என்னவாக இருந்திருக்கும். அண்ணாமலைக்கு தெரியாது. அண்ணாமலையி பாட்டனார் இருந்திருந்தால் அண்ணா உடைய பெருமையை சொல்வார். அவர் இப்படி பேசுவதை நிறுத்துக்கொள்ளாவிட்டால், தமிழ்நாடு மக்கள் எழுந்தால், அவர் எங்கு போலீஸ் அதிகாரியாக பணிபுரிந்தாரோ அந்த கர்நாடகாவுக்கு மிக விரைவிலேயே ஓடிப்போகிற நிலைமை வரும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.” என்றார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!

ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…

10 hours ago

திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…

12 hours ago

தலைக்கேறிய மது போதையில் உளறிய குட் பேட் அக்லி நாயகி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…

12 hours ago

குக் வித் கோமாளியில் சொல்வதெல்லாம் உண்மை? வெளிவந்தது போட்டியாளர்களின் பெயர்கள்!

தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…

12 hours ago

தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!

கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…

13 hours ago

கனிமொழி எம்பி தேசவிரோதியா? பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சால் பரபரப்பு!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…

13 hours ago

This website uses cookies.