தமிழகம்

’கார்ல இருந்து இறங்க மாட்டீங்களா’.. திமுக ஞாபகம் வைக்க இதுபோதும்.. அண்ணாமலை கடும் தாக்கு!

விழுப்புரத்தில், பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்யச் சென்ற அமைச்சர் பொன்முடி மீது பொதுமக்கள் சேற்றை வாரி வீசியச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம்: வங்கக் கடலின் தென் பகுதியில் உருவான ஃபெஞ்சல் புயலால் சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகள் கடும் பாதிப்புகளைச் சந்தித்து உள்ளது. எனவே, ஆளும் தரப்பினர், அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட கட்சியினர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று ஆய்வு செய்து, ஆறுதல் கூறியும், நிவாரணங்கள் வழங்கியும் வருகின்றனர்.

அந்த வகையில், ஃபெஞ்சல் புயல் மழையால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தின் இருவேல்பட்டு பகுதிக்கு வனத்துறை அமைச்சர் பொன்முடி, விக்கிரவாண்டி எம்எல்ஏ அன்னியூர் சிவா, விழுப்புரம் திமுக மாவட்ட செயலாளர் கௌதம சிகாமணி மற்றும் திமுக நிர்வாகிகள் சென்றனர்.

அப்போது, அமைச்சர் பொன்முடி தன்னுடைய காரில் இருந்து இறங்காமல், பாதிப்பு குறித்து விசாரித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மக்கள், ‘காரில் இருந்து இறங்க மாட்டீங்களா, நேற்று வராமல் இப்போது எதற்காக வருகிறீர்கள் ?’ என்று கேட்டு வாக்குவாதம் செய்து உள்ளனர். அது மட்டுமல்லாமல், அவர்கள் மீது மழைச் சேற்றை வாரி இறைத்து, சாலை மறியலிலும் ஈடுபட்டு உள்ளனர்.

இதனையடுத்து போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில், பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். பின்னர், காரை விட்டு இறங்கிய அமைச்சர் பொன்முடி, எம்எல்ஏ அன்னியூர் சிவா மற்ரும் கௌதம சிகாமணி ஆகியோர், பாதிக்கப்பட்ட பகுதிகளை சிறிது நேரம் ஆய்வு செய்துவிட்டு, அங்கிருந்து உடனடியாக புறப்பட்டுச் சென்றனர்.

இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டு உள்ள எக்ஸ் தளப் பதிவில், “இதுதான் தமிழகத்தின் தற்போதைய நிலை. முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் சென்னையின் தெருக்களில் புகைப்படம் எடுப்பதில் மும்முரமாக இருந்தனர். அதேநேரம், சென்னை மாநகரில் மிகக் குறைந்த மழையே பெய்தது.

சென்னையைத் தாண்டி நடக்கும் நிகழ்வுகளைக் கண்காணிக்கத் தேவையில்லை என அவர்கள் எண்ணிவிட்டனர். திமுகவின் ஊடகப் பிரிவாக டிஐபிஆர் (TN DIPR) நடந்துகொள்வதுடன், வெள்ளத்தின் உண்மைகளிலிருந்து மக்களைத் திசைதிருப்ப கோபாலபுரம் வாரிசுகளை விளம்பரப்படுத்துவதில் அது மும்முரமாக உள்ளது.

இதையும் படிங்க: ’சங்கினா நண்பன்.. திராவிடன்னா திருடன்..” மீண்டும் சீமான் பரபரப்பு பேச்சு!

இன்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்ட ஊழல் திமுக அமைச்சர் பொன்முடியால், பொதுமக்களின் விரக்தி உச்சநிலையை எட்டியது. திமுகவுக்கு என்ன நடக்கப்போகிறது என்பதற்கு இது ஒரு நினைவூட்டல்” எனத் தெரிவித்து உள்ளார்.

Hariharasudhan R

Recent Posts

வடசென்னை 2 டிராப்? வெளிப்படையாக போட்டுடைத்த வெற்றிமாறன்!

மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…

10 minutes ago

ஜெகன்மூர்த்தி வீட்டுக்கு சென்ற பொற்கொடி ஆம்ஸ்டிராங்.. மனைவியை சந்தித்து ஆதரவு..!

காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…

46 minutes ago

இவருக்கு இப்படி ஒரு முகம் இருக்கா? வீட்டு விசேஷத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் செய்த காரியம்! வைரல் வீடியோ…

இந்தியாவின் முன்னணி இயக்குனர் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து “மதராஸி” திரைப்படத்தை…

58 minutes ago

விடாது கருப்பு போல் துரத்தும் சாபம்? காந்தாரா ஹீரோவை குறி வைத்த மரணம்! ஒரு வேளை இருக்குமோ…

தொடர் மரணங்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த “காந்தாரா” திரைப்படம் இந்தியா முழுவதும் மிகப்…

2 hours ago

நள்ளிரவில் முன்னாள் அமைச்சர் தியானம்.. இபிஎஸ் மீண்டும் முதலமைச்சராக வேண்டி வழிபாடு!!

தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளதால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் வேகம் காட்டி வருகின்றனர். இதையும்…

2 hours ago

எனக்கும் காவ்யா மாறனுக்கும் காதல்? திருமணம் குறித்து முதன்முதலாக வாய் திறந்த அனிருத்!

அனிருத்-காவ்யா மாறன் காதல்? தமிழ் சினிமாவின் டாப் இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். தற்போது விஜய்யின் “ஜனநாயகன்”, ரஜினியின் “கூலி”,…

3 hours ago

This website uses cookies.