தமிழகம்

குருட்டுப் பூனை.. Mental Checkup.. ஸ்டாலினை கடுமையாக சாடிய அண்ணாமலை!

முதல்வரே தமிழகத்தில் மூன்றாவது மொழி என்னவென்று முடிவெடுக்க முடியாது, பெற்றோர் ஆசிரியர் கழகம் தான் முடிவெடுக்கும் என அண்ணாமலை கூறியுள்ளார்.

கோயம்புத்தூர்: கோவை விமான நிலையத்தில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “புதிய தொகுதி மறுவரையறை தென்னிந்தியாவைப் பாதிக்கும் என யார் முதல்வருக்குச் சொன்னது? தொகுதிகள் மறுவரை பற்றி முதல்வருக்கு யார் சொன்னார்கள் எனத் தெரியாது.

அந்த மனிதன் யார் எனக் கண்டுபிடிக்க முயற்சித்து வருகிறேன். மக்கள் தொகை கணக்கெடுக்க வேண்டும். முதல்வர் Fitஆக இருக்கிறாரா என சந்தேகம் எழுகிறது. வருடம் ஒருமுறை Mental Checkup செய்வார்கள், அது வழக்கம். காங்கிரஸ் ஏன் புரளி பரப்ப வேண்டுமென பிரதமர் கூறியுள்ளார்.

முதல்வர் ஏன் கபட நாடகத்தை அரங்கேற்ற வேண்டும்? மும்மொழிக் கொள்கை எதிர்ப்பில் அவர்கள் தோற்றுவிட்டார்கள். திமுகவின் தொண்டர்கள் பள்ளிக்குச் சென்று கொஞ்சமாவது படியுங்கள். இந்தியாவில் எந்த பாதிப்பும் வராது என பிரதமர் கூறியுள்ளார்.

2001ல் மறுசீரமைப்பு செய்திருக்க வேண்டும். முதல்வரிடம் யார் சொன்னார்கள் என்று அவர் சொன்னால், அனைத்துக் கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்கும். மறுசீரமைப்பு வரும்போது தமிழகத்தில் பிரச்னை வராமல் பார்த்துக் கொள்வது எங்கள் பொறுப்பு.
காங்கிரஸ் மாடல் மக்கள் தொகையை அடிப்படையாக கொண்டது.

காங்கிரஸ் போன்று முடிவெடுக்க மாட்டோம் என பிரதமர் கூறியுள்ளார். குருட்டு பூனை விட்டத்தில் பாய்வது போல் முதல்வர் நடந்து கொள்கிறார். மும்மொழிப் போருக்கு தயாராகட்டுமே. திமுகவின் மொழிப் போராட்டம் என்னவென்றால், அவர்கள் குழந்தைகளுக்கு மூன்று மொழி, மற்றவர்களுக்கு இரண்டு மொழி என்பதுதான்.

மூன்று மொழி படித்த சாதனையாளர்கள் முதல்வர் கண்ணுக்குத் தெரியவில்லையா? இரு மொழியால்தான் தமிழகம் முன்னேறி இருக்கிறது என்றால், முதல்வரின் கணக்கு வாத்தியார் யார் என பார்க்க வேண்டும். முதல்வரே தமிழகத்தில் மூன்றாவது மொழி என்னவென்று முடிவெடுக்க முடியாது, பெற்றோர் ஆசிரியர் கழகம் தான் முடிவெடுக்கும்.

மொழி என்பது ஒரு ஆற்றல், அது சாதனைக்குத் துணைபுரியும். மூன்றாவது மொழியை அப்துல் கலாம் ஐயா வேண்டாம், ஜனாதிபதி ஆக மாட்டேன் எனக் கூறியிருந்தால் என்ன ஆகியிருக்கும்? ஜாக்டோ ஜியோ மீது நம்பிக்கை இல்லை. ஓநாயும், ஆடும் சண்டை போட்டுக் கொள்வது போன்று உள்ளது.

இதையும் படிங்க: விடாமுயற்சி வசூலை விரட்டி முறியடித்த டிராகன்.. வெறும் 5 நாட்களில்..!!

அரசு ஊழியர்கள் பக்கம்தான் நாங்கள் இருப்போம். ஜாக்டோ ஜியோ பக்கம் இல்லை,
ஜாக்டோ ஜியோ இதற்கு முன்பு திமுகவிற்கு ஆதரவாக இருந்தவர்கள். தேர்தலின்போது திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டவர்கள் ஜாக்டோ ஜியோ அமைப்பினர். இன்று ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம் கபட நாடகமாக இருக்கலாம்.

கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் செய்தித்தாளில் பெட்டி செய்தியாக வர வேண்டும் என்பதற்கு தான். கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் காமெடிக்காக நடத்தப்படுவது. அதனால் கொடி விற்பனை செய்பவர்களுக்கு கொடி விற்பனையாகிறது. மும்மொழிக் கல்வி என்னுடைய குழந்தைகள் திராவிட மொழி (தெலுங்கு, கன்னடம், மலையாளம்) ஏதேனும் ஒன்றை கற்றுக்கொள்ள வேண்டும், நான்காவது மொழியாக வட மொழி ஒன்றை (இந்தி, சமஸ்கிருதம்) கற்றுக்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.

Hariharasudhan R

Recent Posts

ஆஹா, இது செம கம்பேக்! சின்மயியை மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்த டி இமான்…

பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…

18 hours ago

ராயப்பன் கேரக்டர் உண்மையிலேயே வாழ்ந்தவர்- யார் அந்த நபர்? சீக்ரெட்டை உடைத்த அட்லீ

டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…

19 hours ago

நாச்சியப்பன் கடையில் பெயரை பொறித்து இனியும் மக்களை ஏமாற்ற முடியாது.. அண்ணாமலை சாடல்!

பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…

19 hours ago

நல்ல வேளை இந்த பாட்டை படத்துல வைக்கலை, சுத்தமா செட் ஆகலை? “முத்தமழை” வீடியோ பாடலால் ரசிகர்கள் ஏமாற்றம்

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…

19 hours ago

கழிவறையில் ரகசிய கேமரா… வீடியோ எடுத்து ஆசைக்கு இணங்க பெண் போலீசுக்கு மிரட்டல்..!!

கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…

19 hours ago

இணையத்தில் டைட்டில் கசிந்ததால் படத்தின் பெயரையே மாற்றிய சூர்யா 45 இயக்குனர்? அடடா…

சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…

20 hours ago

This website uses cookies.