மீண்டும் தமிழகத்தின் நிதி நிலைமை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடத் தயார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழகத்திற்கு மத்திய அரசு போதுமான நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. மத்திய அரசை குறை கூறுவதே இங்குள்ளவர்களின் முழு வேலையாக உள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 43 ஆயிரம் கோடியை மத்திய அரசு வழங்கி உள்ளது. மத்திய அரசு நிதி ஒதுக்கியது தொடர்பான வெள்ளை அறிக்கையை ஏற்கனவே தாக்கல் செய்துள்ளேன். மேலும், மீண்டும் 36 பக்கங்கள் கொண்ட வெள்ளை அறிக்கையை கொடுக்க தயாராக இருக்கிறேன்.
கடந்த 10 ஆண்டுகளில் 11 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. வருகின்ற மத்திய பட்ஜெட்டில் பெரிய அளவிலான திட்டங்கள் தமிழகத்திற்கு வரும்” என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தமிழ்நாட்டின் நிதி நிலைமை திவாலாக போவதாக அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்த நிலையில், அதற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்திருந்தார்.
இதையும் படிங்க: 3ஆம் ஆண்டு தூ(ங்கும்)வக்க விழா.. பரபரப்புக்கு உள்ளான பேனர்.. போலீஸ் கூறுவது என்ன?
இது தொடர்பாக விருதுநகரில் செய்தியாளர்களைச் சந்தித்த தங்கம் தென்னரசு, பரபரப்பை உருவாக்க வேண்டும் என்பதற்காக எடப்பாடி பழனிசாமி தவறான குற்றச்சாட்டை கூறியுள்ளார். அடிப்படை புரிதல் இன்றி எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார்” எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.