தமிழகம்

இனி செருப்பு போட மாட்டேன்.. என்னை நானே சாட்டையால் அடிப்பேன்.. அண்ணாமலை பரபரப்பு பேச்சு!

அண்ணா பல்கலை விவகாரத்தில் நீதி கிடைக்கும் வரை காலணி அணியப் போவது இல்லை என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

கோயம்புத்தூர்: கோவை விமான நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இன்று (நவ.26) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “சில நேரங்களில் எதற்கு அரசியலில் இருக்கின்றோம் என்ற எண்ணம் வருகிறது. நான் அரசியலில் தொடர வேண்டுமா என நினைக்கிறேன்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் கொடூரமாக சித்திரவதை செய்து இருக்கும் செயல் நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பாக இல்லை. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது திமுகவில் வட்டப் பொறுப்பில் இருக்கும் நபர் தான். அமைச்சர்களுடன் நின்று அவர் படம் எடுத்து இருக்கிறார்.

ஆனால், அவர் கட்சிப் பொறுப்பாளர் இல்லை எனக் கூறுகின்றனர். ஆனால், அவர் பொறுப்பில் இருக்கின்றார். முரசொலியில் வந்து இருக்கின்றது. இனி ஆரோக்கியமான அரசியல், மரியாதை, வெங்காயம் எல்லாம் கிடையாது. எங்களை நாங்களே வருத்திக்கொண்டு போராட உள்ளோம்.

நாளை எனக்கு நானே சாட்டையடித்துக் கொள்ளும் போராட்டத்தை நடத்தப் போகிறேன். என் இல்லத்திற்கு வெளியில் நின்று சாட்டையடித்துக் கொள்ள போகிறேன். தொண்டர்களும் இதைச் செய்ய வேண்டும் என்று சொல்லவில்லை. அவர்கள், வீட்டு வாசலில் நின்றால் போதும்.

மக்கள் கவனத்தை ஈர்ப்பதற்கு வேறு வழியில்லை. நடுத்தர மக்கள் வெளியில் வர வேண்டும். ஊடகத்தில் இதனை விவாதிக்க வேண்டும். இதைப் பற்றிப் பேச வேண்டும். இந்தச் சம்பவத்திற்குப் பொறுப்பேற்று ஆணையர் பதவி விலக வேண்டும். குறைந்தது டெபுடி கமிஷனர் பதவி விலக வேண்டும்.

இதையும் படிங்க: பெண் போலீசிடம் அத்துமீறல்.. ராஜபாளையம் எஸ்எஸ்ஐ சஸ்பெண்ட்!

சிசிடிஎன்எஸ் நெட்வொர்க்கில் இருந்து எப்படி FIR வந்தது? அந்தப் பெண் சரியில்லாதவர் என்பதைக் காட்ட வேண்டும் என்பதற்காக இதை வெளியிட்டு உள்ளனர். நீதி கிடைக்கும் வரை காலணி அணியப் போவது கிடையாது. கை, கால் உடைப்பு ஒரு தண்டனையா? உண்மையான அரசாக இருந்தால் 10 நாளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, தண்டனை கொடுக்க வேண்டும்.

அண்ணாமலைக்கு பொய் சொல்வது மட்டும் தான் வேலை என அமைச்சர் ரகுபதி சொல்கிறார். தப்பு செய்தால் சொல்வது எங்கள் வேலை, பதில் சொல்வது உங்களுடைய வேலை” எனக் கூறினார். முன்னதாக, அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக ஒருவரை கைது செய்துள்ள நிலையில், அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Hariharasudhan R

Recent Posts

என் மீது வழக்கு போட்ட சிபிஐ அமைப்பை தண்ணி குடிக்க வைத்தவன் நான்… ஆ.ராசா பெருமிதம்!

புதுக்கோட்டை கலைஞர் தமிழ்ச் சங்கத்தின் 25வது ஆண்டு விழா நடைபெற்றது. இதையும் படியுங்க: 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல்…

23 minutes ago

அந்த நபர் அப்படி பண்ணது… அதிர்ச்சியாகிட்டேன்- ஜொனிடா காந்திக்கு நடந்த பாலியல் சீண்டல்? அடக்கொடுமையே

மனம் கவர்ந்த பாடகி பாலிவுட்டில் “சென்னை எக்ஸ்பிரஸ்” திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் மூலம் சினிமாவிற்குள் பின்னணி பாடகியாக அடியெடுத்து…

1 hour ago

80 வயது மூதாட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை… சம்பவத்திற்கு பின் கும்பல் செய்த கொடூர சம்பவம்!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திராசு கிராமத்தில் 80 வயது மூதாட்டி இயற்கை உபாதை கழிக்க அருகில் உள்ள…

1 hour ago

அண்ணாமலை, சீமான் ஓட்டு கேட்டு வந்தால் செ**பை கொண்டு அடிங்க.. சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீண்டும் சர்ச்சை!

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பஜார் வீதியில் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மற்றும் ஆதிதிராவிடர் நலக்குழு சார்பில்…

2 hours ago

ஒரு வழியா கட்டிடத்தை நிமித்திட்டாங்கப்பா- தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்ட வீடியோ! விஷால் ஹேப்பி அண்ணாச்சி…

பல வருடக் கனவு கடந்த 2016 ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க புதிய கட்டிடத்தின் பணிகள் தொடங்கப்பட்டது. தென்னிந்திய…

2 hours ago

இனி திமுகவின் பண பலம், அதிகார பலம் எடுபடாது… 234 தொகுதியிலும் அதிமுகதான் : முன்னாள் அமைச்சர் உறுதி!

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…

18 hours ago

This website uses cookies.