தமிழகம்

இனி செருப்பு போட மாட்டேன்.. என்னை நானே சாட்டையால் அடிப்பேன்.. அண்ணாமலை பரபரப்பு பேச்சு!

அண்ணா பல்கலை விவகாரத்தில் நீதி கிடைக்கும் வரை காலணி அணியப் போவது இல்லை என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

கோயம்புத்தூர்: கோவை விமான நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இன்று (நவ.26) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “சில நேரங்களில் எதற்கு அரசியலில் இருக்கின்றோம் என்ற எண்ணம் வருகிறது. நான் அரசியலில் தொடர வேண்டுமா என நினைக்கிறேன்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் கொடூரமாக சித்திரவதை செய்து இருக்கும் செயல் நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பாக இல்லை. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது திமுகவில் வட்டப் பொறுப்பில் இருக்கும் நபர் தான். அமைச்சர்களுடன் நின்று அவர் படம் எடுத்து இருக்கிறார்.

ஆனால், அவர் கட்சிப் பொறுப்பாளர் இல்லை எனக் கூறுகின்றனர். ஆனால், அவர் பொறுப்பில் இருக்கின்றார். முரசொலியில் வந்து இருக்கின்றது. இனி ஆரோக்கியமான அரசியல், மரியாதை, வெங்காயம் எல்லாம் கிடையாது. எங்களை நாங்களே வருத்திக்கொண்டு போராட உள்ளோம்.

நாளை எனக்கு நானே சாட்டையடித்துக் கொள்ளும் போராட்டத்தை நடத்தப் போகிறேன். என் இல்லத்திற்கு வெளியில் நின்று சாட்டையடித்துக் கொள்ள போகிறேன். தொண்டர்களும் இதைச் செய்ய வேண்டும் என்று சொல்லவில்லை. அவர்கள், வீட்டு வாசலில் நின்றால் போதும்.

மக்கள் கவனத்தை ஈர்ப்பதற்கு வேறு வழியில்லை. நடுத்தர மக்கள் வெளியில் வர வேண்டும். ஊடகத்தில் இதனை விவாதிக்க வேண்டும். இதைப் பற்றிப் பேச வேண்டும். இந்தச் சம்பவத்திற்குப் பொறுப்பேற்று ஆணையர் பதவி விலக வேண்டும். குறைந்தது டெபுடி கமிஷனர் பதவி விலக வேண்டும்.

இதையும் படிங்க: பெண் போலீசிடம் அத்துமீறல்.. ராஜபாளையம் எஸ்எஸ்ஐ சஸ்பெண்ட்!

சிசிடிஎன்எஸ் நெட்வொர்க்கில் இருந்து எப்படி FIR வந்தது? அந்தப் பெண் சரியில்லாதவர் என்பதைக் காட்ட வேண்டும் என்பதற்காக இதை வெளியிட்டு உள்ளனர். நீதி கிடைக்கும் வரை காலணி அணியப் போவது கிடையாது. கை, கால் உடைப்பு ஒரு தண்டனையா? உண்மையான அரசாக இருந்தால் 10 நாளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, தண்டனை கொடுக்க வேண்டும்.

அண்ணாமலைக்கு பொய் சொல்வது மட்டும் தான் வேலை என அமைச்சர் ரகுபதி சொல்கிறார். தப்பு செய்தால் சொல்வது எங்கள் வேலை, பதில் சொல்வது உங்களுடைய வேலை” எனக் கூறினார். முன்னதாக, அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக ஒருவரை கைது செய்துள்ள நிலையில், அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Hariharasudhan R

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.