தமிழகம்

’பக்கம் 21-க்கு நான் பிறக்கவில்லை’ – துரைமுருகனுக்கு அண்ணாமலை தடால் பதிலடி!

பெரியார் குறித்து சீமான், அண்ணாமலையின் பேச்சுக்கு ‘பிறப்பை’-க் கொண்டு அமைச்சர் துரைமுருகன் பதில் கூறிய நிலையில், அண்ணாமலை அதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

கோயம்புத்தூர்: கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, இது தொடர்பாக பேசுகையில், “பெரியாருக்கும், நிகழ்கால தமிழகத்திற்கும் எவ்வித தொடர்புமில்லை. இவர்கள் எப்போதோ கட்டமைத்த ஒரு பிம்பத்தை வைத்து அரசியல் செய்கின்றனர்.

ஒரு பலூனை எவ்வளவு ஊதினாலும் அது ஒருநாள் உடையத்தான் போகிறது. முரசொலி 1962 பொங்கல் மலரில், ‘பெரியாரை கேளுங்க?’ என்ற ஒரு கார்ட்டூன் வெளியாகி உள்ளது. அதைப் படித்தால் அருவருப்பாகிவிடும், ஆபாசமாகப் போய்விடும். சீமான் பேசியிருக்கிறார், நாங்கள் பேச விரும்பவில்லை.

பெரியாரைப் பற்றிய எங்கள் பார்வை, சிந்தனை என்பது மாறவில்லை. தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும்போது இந்து அறநிலையத்துறை இருக்காது. கோயிலுக்கு வெளியே ஆபாசமாக என்ன பொறித்து வைத்திருக்கிறார்களோ, அவை அகற்றப்படும். நான் பெரியாரைப் பற்றி பேசுவதால் என் பிறப்பைப் பற்றியும் சந்தேகப்படுகிறார் துரைமுருகன்.

அவருக்கு நான் பதில் சொல்ல வேண்டும். நான் ஒரே அப்பா, அம்மாவுக்குத் தான் பிறந்தேன். விவசாயம் செய்கின்ற குடும்பத்தில் தான் பிறந்தேன். அதிலும் மாற்றுக்கருத்து இல்லை. கிராமத்தில் தான் பிறந்தேன். அதிலும் எனக்கு சந்தேகம் இல்லை. இதுவரை ஊழல் எதிலும் செய்ததில்லை, அதிலும் சந்தேகமில்லை.

இதையும் படிங்க: நீங்க அவரை கவனிச்சீங்களா…துபாய் கார் ரேஸில் நடனம் ஆடிய அஜித் பட இயக்குனர்…!

அமலாக்கத் துறையினர் என் வீட்டுக்கு கடப்பாரை எடுத்துக் கொண்டு வந்து ரெய்டு செய்யவில்லை. ரெய்டு அடிக்கும் போது, பையன் துபாயில் போய் உட்கார்ந்திருக்கும் அளவுக்கான ஒரு பையனை நான் பெற்றெடுக்கவில்லை. அதிலும் எனக்கு சந்தேகமில்லை. அதையெல்லாம் தாண்டி பக்கம் 21க்கு நான் பிறக்கவில்லை. எங்கள் பிறப்பு நல்ல பிறப்பு தான்” எனத் தெரிவித்தார்.

முன்னதாக, பெரியார் குறித்து சீமான் பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு திக, திமுக, தபெதிக உள்பட பல்வேறு பெரியாரிய அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தன. அதேநேரம், சீமான் பேசியதற்கு தன்னிடம் ஆதாரம் உள்ளதாக அண்ணாமலை கூறியிருந்தார். இந்த நிலையில், “பெரியார் பற்றி அவதூறு பேசுகிறவர்களின் பிறப்பையே நான் சந்தேகப்படுகிறேன்” என அமைச்சர் துரைமுருகன் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Hariharasudhan R

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.