நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் திமுக அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக மற்றும் பாஜக தலைமையில் கூட்டணியில் போட்டியிட்ட கட்சிகள் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
இருப்பினும் அக்கட்சியின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. அதிமுக – பாஜக கூட்டணி நீடித்திருந்தால் பல இடங்களில் இரு கட்சிகளுமே வெற்றி பெற்றிருக்கும் என இரு கட்சி நிர்வாகிகளும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக பாஜகவின் மாநில அறிவுசார் பிரிவு தலைவரான கல்யாண ராமன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், கலகத்தில் தான் நீதி பிறகும் என்பார்கள். அண்ணாமலை தனக்கு என்று டெல்லியில் ஒரு சூழலை உருவாக்கி வைத்துள்ளார். இதுதான் அவரை பாதுகாப்பாக வைத்துள்ளது.
மேலும் படிக்க: மிகப்பெரிய தப்பு பண்ணிட்டேன்.. இனி நான் அதை செய்ய மாட்டேன்.. பிரசாந்த் கிஷோர் வருத்தம்!
பொன் ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழிசை, இல.கணேசன் உள்பட கட்சியை வளர்க்க பாடுபட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தமிழிசை செளந்தரராஜன் சொன்ன கருத்திற்கு ஆதரவாக எக்ஸ் தளத்தில் பதில் அளித்துள்ளார். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வழக்கம் போல் தேசிய தலைமையை தவறாக வழிநடத்த முயற்சிக்கிறார் எனவும், அவரிடம் சிறிது கூட அறம் என்பது கிடையாது எனவும் பாஜக நிர்வாகி கல்யாண் ராமன் தனது எக்ஸ் பதிவு மூலம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.