கார் வெடி விபத்து பற்றி டுவிட்டரில் அவதூறு வழக்கில் கைதான கிஷோர் கே சுவாமிக்கு புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது காவல்துறை
கோவை கார் வெடிப்பு அசம்பாவிதத்தால் பலியானவர் ஜமேஷா முபின். கார் வெடிப்பு அசம்பாவிதத்தின் பின்னணியில் சதி திட்டம் தீட்டியது தனிப்பட்ட விசாரணையில் அம்பலனானது.
இந்த நிலையில் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் ஜமேஷா முபின் உடல் அவரது மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டன. ஆனால் அவர் உடலை அடக்கம் செய்ய முயன்ற போது ஜமாத்துகள் முன்வரவில்லை.
அமைதியை விரும்பும் ஜமாத்துகள் அசம்பாவிதம் செய்ய முயன்ற நபரை அடைக்க செய்ய முதலில் மறுத்திருக்கின்றனர். பின்னர் மனிதாபிமான அடிப்படையில் முபின் உடல் அடக்கம் செய்யப்பட்டன. இந்த நிலையில் முபின் உடலை அடக்கம் செய்ய மறுத்தது குறித்து தகவல் வெளியாகியிருந்தன.
இந்த நிலையில் அதனை ரீ டுவிட் செய்த கிஷோர் கே சாமி குண்டு ஒழுங்காக வைக்க தெரியாத நபரை ஜமாத்துக்கள் எப்படி அடக்கம் செய்வார்கள் என்ற பொருளில் ட்விட் செய்திருக்கின்றார்.
இது பதட்டமில்லாத பகுதியில் ட்விட் குண்டை வீசுவதாக அமைந்திருக்கின்றன. இதனால் இந்து முஸ்லீம் இடையே சச்சரவு ஏற்பட வாய்பிருக்கின்றன.
இதனை அறிந்த சிட்டி சைபர் கிரைம் போலீஸார் கிஷோர் கே சாமி மீது அமைதியை குலைக்கும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவிட்ட குற்றத்துக்காக இந்திய தண்டனைச் சட்ட பிரிவு 153 இன் கீழ் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
153 IPC – கலகம் செய்வதற்குத் தூண்டி விட்டு அதனால் கலகம் ஏற்பட்டால் அந்தக் கலகத்தைத் தூண்டியவருக்கு ஓர் ஆண்டுக்கு மேற்படாத சிறைவாசம் அல்லது அபராதம் அல்லது சிறைவாசம் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும்.
சைபர் கிரைம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்த நிலையில் கைது செய்யப்பட்டு இருக்கின்ற கிஷோர் கே சாமியை கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் நான்கில் நீதிபதி சரவணா பிரபு முன்பாக சைபர் குற்றப் பிரிவு போலீசார் ஆஜர் படுத்தி இரண்டு நாட்களுக்கு காவலில் எடுத்து விசாரிக்க கோரி மனு தாக்கல் செய்துள்ளனர்.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.