தருமபுரியில் 3 யானைகள் கடந்த வாரம் உயிரிழந்த நிலையில், இன்று மேலும் ஒரு யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பகுதியில் நேற்று மாலை 4 மணிக்கு வந்த யானை காரிமங்கலம் வழியாக இன்று காலை 7.30 மணி அளவில் ஒரம்பட்டி, வகுப்பம்பட்டி பகுதியில் நுழைந்து வகுரப்பம்பட்டி, மோட்டூர், ஜடையன் கொட்டாய் வழியாக கம்பைநல்லூர் அருகே உள்ள கெலவள்ளி கிராமத்திற்கு வந்து கொண்டிருந்தது. அப்போது, அங்கு ஏரிக்கரை ஓரத்தில் செல்வராஜ், கஸ்தூரி தோட்டம் அருகே 37 வயது காட்டுயானை ஒன்று நடந்து சென்று கொண்டிருந்தது.
அந்த சமயம் அங்கு இருந்த EB லைனில் இருந்து மின்சாரம் பாய்ந்து யானை பரிதாபமாக உயிரிழந்தது. இச்சம்பவம் தொடர்பாக பொதுமக்கள் மொரப்பூர், பாலக்கோடு, தர்மபுரி, வனத்துறையினர் மற்றும் கம்பைநல்லூர் காவல்துறையினருக்கு அளித்த தகவல் அளித்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர் உயிரிழந்த காட்டு யானையின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காட்டு யானை உயிரிழந்து சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சில தினங்களுக்கு முன்பு மின்சாரம் தாக்கி மூன்று காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன. இதுவரையில் 5 யானைகள் உயிரிழந்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், தொடர்ச்சியாக யானைகள் மரணம் அடைந்து வருவதால், இது இயற்கையை பாதுகாக்கும் யானையின் அழிவு அல்ல, இயற்கையே அழிவு என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்கவும், தொடர்ந்து யானைகள் மரணம் அடைந்து வருவதை தடுக்க, வனத்துறையினர் மற்றும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.