அமெரிக்கா விதித்த 50 சதவீத வரி அமலுக்கு வந்துள்ள நிலையில், ஜவுளி பொருட்களை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக 40 நாடுகளில் உள்ள இந்திய தூதரக அலுவலகங்கள் மூலம் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
இதனிடையே, அமெரிக்காவின் வரி விதிப்பால் இந்தியாவின் 3,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஜவுளி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தொழிலாளர்களுக்கு உடனடி நிவாரணம் மற்றும் சலுகைகளை வழங்க வேண்டும் என்றும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியிடம் வலியுறுத்தியிருந்தார்.
இந்தச் சூழலில், பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய அரசின் ஜவுளி ஏற்றுமதி முயற்சிகள் குறித்து கருத்து தெரிவித்து, தமிழக அரசை விமர்சித்துள்ளார்.
அவர் வெளியிட்ட பதிவில், “தமிழகத்தில் திமுக அரசு செய்யும் ‘பேட்ச் வொர்க்’ போன்ற நடவடிக்கைகளுக்கு மாறாக, மத்திய அரசு வரி விதிப்பு விவகாரத்தில் ஏற்கனவே தீவிர நடவடிக்கைகளைத் தொடங்கிவிட்டது. அதேநேரம், எந்த காரணமுமின்றி உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுக்கிறேன்,” எனத் தெரிவித்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.